கனவு நிலையில்
துலக்கமும் தூக்கமும் இல்லா
உணர்வு மட்டும்
இருக்கிறதா இல்லையா என
ஒவ்வொரு அரசியலாய்
நகர்கிறது
இன்றைய பொழுதும்
காத்திருந்து இருந்து
பழகிப்போய்
ஒட்டிய மண்
தட்டிக்கொண்டு
விழுந்துவிட்ட பழுத்த பல்லாய்
முரசுச் சொற்களாலும்
வரும் என்றே
நகர்த்திக்கொண்டு
யார் யாரோ வாழ
ஏனோ தானோ என வாழ
வாழப்படாமல்
வாழுகிறோம்
நன்றி மணிஜீ படத்துக்கு
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
arumai...vaalththukkal
Post a Comment