இணையத்தளம்
விரல் நுனியில்
உலகைக்காட்டும்
கண்ணாடி
புல்லாங்குழல்
அழுகிறது - பாவம்
அதுதான் என்ன செய்யும்
அந்தக்காற்று புகாவிட்டால்
இன்னும் அது
வெட்டப்பட்ட வெறும்
மூங்கில் குழல்தான்
அவனும்
அவன் காதலும்போல..............
நிலவு
இரவு வானில்
இறைவன் எழுதும்
வெளிச்சக்கவிதை
மேகம்
ஈர விழுதுகள்
காற்றில் நடத்தும்
மிதப்பு ஊர்வலம்
பனித்துளிகள்
மேகத்தில் சிதறி
இலைகளில் ததும்பும்
மோக மொட்டு
நழுவிய நழுவிய
விழுதுகள்
குடை
மலை நீரில்
விரிந்துகொள்ளும்
கறுப்புத்தாமரை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment