Pages

Tuesday, November 24, 2009

பட்டதாரிகள், பரீட்சை, பணம், பயணம்,செலவழித்த மணித்தியாலயங்கள்

இது வானொலில் இரவுநேர நிகழ்ச்சிக்கு கவிவரிகளுக்காகக் கொடுத்த ஐந்து தலைப்புகள் என்று தப்பா நினைக்காதீங்க. சற்று ஆழப்பாருங்ககள்.
ஆம் இதுதான் இன்றைய இலங்கையின் பட்டதாரிகளின் பரிதாப நிலை ....

பட்டதாரிகள்
18,19 வயதுகளில் உயர் தரம் படித்து 20,21,22 வயதுகளில் பல்கலைக்கழகம் சென்று மூன்று அல்லது நான்கு வருடங்கள் வளாகத்தில் படிப்பில் சக்கை போட்டு(நம்ம பாஷையில் மொக்கை போட்டு)பட்டதாரியாகிறோம். இதுல மிகப் பாவப்பட வேண்டியவர்கள் நம்ம கிழக்கு மற்றும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள், பல நெருக்கடிகளுக்கு மத்தியில் படிப்பை மேற்கொள்கிறார்கள்.


சரி படிப்பை ஒருவாறு முடித்த பட்டதாரிகளானோம்.பின்னர் இலங்கையில் பாரம்பரிய வழக்கப்படி பட்டதாரிகள் எதிர்பார்ப்பது அரசாங்க வேலை அதான் கோழி மேய்ப்பது என்றாலும் கோணமேர்ந்துல மேய்க்கணும்.
இப்போ பட்டதாரிகள் எண்ணிக்கை அதிகம் என்பதாலும் பொருளாதார நெருக்கடிக்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலையிலும் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வேலைவாய்ப்புக்கள் இருப்பதாலும் பட்டதாரிகள் போட்டிப் பரீட்சைக்கு முகம் கொடுக்க வேண்டிய(பரிதாப) நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். அந்தவகையில் கடந்த 22 ஆந் திகதி ஒரு போட்டிப் பரீட்சைக்கு சென்ற கதையையும் கவலையையும் பாருங்க.

பரீட்சை
***************************************
தொழில் திணைக்களத்திற்கு தமிழ்மொழிமூல தொழில் அலுவலர்களை ஆட்சேர்த்தலுக்கான விசேட திறந்த/மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை – 2008
"தொழில் திணைக்களத்திற்கு தமிழ்மொழிமூல தொழில் அலுவலர்களை ஆட்சேர்ப்பதற்குப் போட்டிப் பரீட்சை பரீட்சை ஆணையாளர் நாயகத்தால் தமிழ்மொழிமூலம் மட்டும் 2009 நவெம்பர் மாதம் கொழும்பில் நடத்தப்படும்."
ஆட்சேர்ப்புத் திட்டம் :
(அ) அங்கீகரிக்கப்பட்டுள்ள பதவிகள் 20 இல் 10 இன்படி மேலே 3 ஆம் பந்தியின் (i) ஆவது (ii) ஆவது உப பிரிவுகளில் காட்டப்பட்டுள்ள தகைமைகள் பெற்றுள்ள விண்ணப்பதாரிகளில் பரீட்சை ஆணையாளர் நாயகத்தால் நடத்தப்படும் எழுத்துப் பரீட்சையின் பெறுபேறுகளின்படி தொழில் ஆணையாளர் நாயகத்தால் தகைமைகள் மற்றும் சான்றிதழ்கள் பரீட்சிப்பதற்காக நடத்தப்படும் நேர்முகப் பரீட்சையின்படி வெற்றிடங்கள் நிரப்பப்படும்.
(iv)பரீட்சைக் கட்டணம் ரூபா 300 ஆகும்.
**********************************************
இதுதான் இப்பரீட்சைக்கான வர்த்தமானி அறிவித்தலின் சில தகவல்கள்.
அங்கீகரிக்கப்பட்ட 10 பதவி வெற்றிடங்களுக்கு(திறந்த போட்டிப் பரீட்சைக்கு) பரீட்சைக்குத் தோற்றிய பட்டதாரிகள் எண்ணிக்கை எப்படியும் 2500 க்கு மேல் இருக்கும்.(குத்து மதிப்பா போட்டிருக்கன் எண்ணிக்கை அதிகம் என்பதால்) தமிழ்மொழிமூல தொழில் அலுவலர்களை சேர்ப்பதற்கு தமிழ்மொழிமூலம் மட்டும் என்பதால் இப்பரீட்சையை தங்களுக்கே உரிய மாவட்டங்களில் நிகழ்த்தியிருக்கலாம். ஏன் எண்டா பரீட்சை வினாத்தாள் ஒரு மணிநேரம் மட்டும் தான், இதுதான் மிகக் கொடுமையாய் இருந்தது.

பணம்
அங்க இங்க கடன் வாங்கி பரீட்சைக்கு விண்ணப்பம் போட்டாச்சு. 300 ரூபா கட்டிட்டோம் சோதனைக்குப் போகணும் தானே. பயணச் செலவு மற்றும் பட்டபாட்டுச் செலவு அதான் சாப்பாடு,தங்குமிட செலவு...... ம்ம்ம் யாரை நோவோம்..... ஒரு அரசாங்க வேலைக்கு படும்பாடு....

பயணம்
கொழும்பு போகணும் .
கொழும்புக்கு போவதென்றாலே நம்ம அப்பா அம்மாவுக்கு காய்ச்சல் வந்துடும் செல்லப் பிள்ளைதானே என்ன செய்வானோ எண்டு. என்றாலும் புயலைக்கூட தோற்கடிக்கும் சக்தி அவனுக்குள்ள எண்ட நம்பிக்கை(இது போதும் நமக்கு)
கடந்த கால கசப்பான காடையர்களின் வெறித்தனத்தில் சிக்கித் தப்பியவர்கள் அதுதான் இந்தப் பயம் அவர்களுக்கு.
ஆனாலும் போவதென்று வெளிக்கிட்டாச்சு. நூடில்ஸ் சுத்தித் தந்தாள் என் அக்காள். தண்ணிப் போத்தலுடன் நான் ஒரு பயணப் பொதி சுமந்து கொண்டு.....
நம்ம ஊரில இருந்து பி.ப. 6.45 பேருந்தில் எறிட்டன். நான் பதிவு செய்த 31 ஆம் ஆசனம் இன்னொருவரின் இருப்பிடமானது, வேற ஒன்றுமில்லை அதே இலக்கத்தில் அவரையும் பதிவு செய்திருக்கிறார்கள். என்ன கொடும அப்பா. ஆனாலும் ஒரு அனாதையான ஆசனம் எனக்காக இருந்தது... அப்பாடா நிம்மதி பெருமூச்சு

செலவழித்த மணித்தியாலயங்கள்
பரீட்சை வினாத்தாள் ஒரு மணிநேரம் மட்டும் தான்.
ஒரு மணிநேர பரீட்சைக்கு நான் செலவழித்த மணித்தியாலயங்கள்....
ஐயோ ஐயோ ........!!!!!
ஏழரை மணித்தியால பேருந்துப் பயணம் கொழும்புக்கு!.. மூன்று மணித்தியாலம் அதிகாலை அரை குறை நித்திரை ஒரு லொட்ஜில்!!.... அப்படி இப்படி எண்டு இரண்டரை மணித்தியாலங்கள் இடம் தேடி காலைச் சாப்பாட்டுடன்.... ம்ம்ம்ம் பரீட்சை ஆரம்பம் ஒருமணித்தியாலயம் பறந்து போச்சு. முடிஞ்சு போயிற்று சோதனை. இரவு தான் அடுத்த பயணம் வீடு நோக்கி. மீண்டும் பேருந்தில் மறுதலையாக பயணம்... மொத்தத்தில் இரண்டு நாட்கள் போயிற்று வீணாய் பணமுடன்.....
பாவம் நம்மளப் போல அவதிப்பட்டவர்களுக்கு இது சமர்ப்பணம் .......

5 comments:

Theepan Periyathamby said...

நல்லா அனுபவித்து எழுதி இருக்கிறிங்க போல தெரியுது , உங்களுக்கு அந்த வேலை கிடைக்க வாழ்த்துகள்

Ramesh said...

உங்களுக்கு மட்டும் என்னவாம் ? பட்டதாரிகள் இப்போ இப்படித்தானே ??
உங்களுக்கும் கிடைக்க வாழ்த்துக்கள்
ஜெயதீபன் நன்றி வருகைக்கும் கருத்துக்கும்

Unknown said...

nice experience sharing sir , ippadi eththanai peru irukkana namma maddakalapula

Unknown said...

nice experience sharing sir , ippadi eththanai peru irukkana namma maddakalapula

Ramesh said...

///nice experience sharing sir , ///
நன்றி...

//ippadi eththanai peru irukkana namma maddakalapula///
எதை கேக்குறீங்க எண்டு தெளிவா சொல்லுங்கப்பா

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு