Pages

Friday, October 1, 2010

சிதறும் சில்லறைகள் - 05 (சிறுவர் முதியோர் தினம் 2010)

இன்றைய தினம்:

இன்று 2010 ஒக்டோபர் 1 ஆம் திகதி சர்வதேச சிறுவர் தினம் (Children's Day)மற்றும் முதியோர் தினம் (Elder's Day).
இவ்வருட சிறுவர் தினத் தொனிப்பொருள் "சிறுவர்களின் உலகைச் சுபீட்சமாக்க அனைவரும் உதவுவோம்'
இவ்வருட முதியோர் தினத் தொனிப்பொருள் "மகிழ்ச்சி நிறைந்த ஆரோக்கியமான முதியோர் பருவம்"

கடந்தவருட சிறுவர் தினம் தொடர்பான என் இடுகை "சர்வதேச சிறுவர் தினம்"

சிறுவர்களுக்குரிய சரியான பராமரிப்பு இல்லாமை, அவர்களுக்கான சரியான வழிகாட்டல்கள் முறையாக முன்னெடுக்கப்படாமை,சிறுவர்களுக்கு உரிய இடம் வழங்கப்படாமை அவா்கள் எதிர்நோக்கும் சவால்களாகும்.
நமது மனித வளர்ச்சி என்று சொல்லப்படுவதன் ஆரம்பமே சிறுவர் பருவம் என்பதை நாம் வளர்ந்த பின் மறந்துவிடுவதுதான் வேதனையான விடயம்.
நாம் நமது வீட்டுப்பிள்ளைகள் மட்டும் வளர்ந்தால் போதும் என்ற மனப்பான்மையோடு இருப்போமானால் போதாது. மற்றவர் பிள்ளை என்ற உணர்வை விடுத்து நமது பிள்ளை என்ற உயர்வான சிந்தனையை ஏற்றுக்கொள்ளவேண்டும்.
சிலநேரம் இந்த சிந்தனையில் நாம் இருந்து பிறர் பிள்ளைகளுக்கு உதவும்போது அந்தப்பிள்ளைகள் அதை பிரயோசனமாக ஏற்காமல் உதாசீனம் செய்யும் போதுதான் நமக்கு இருந்த அந்த நல்லெண்ணமும் விட்டுவிலகும் சந்தர்ப்பம் வருவது என்பது கவலையானதுதான். ஏனெனில் அந்தப்பிள்ளை பக்குவப்படாமல் அல்லது தனது போக்கு, நிலைமை என்று விழிப்புணர்வு அந்தப்பிள்ளைக்கு விளங்கப்படுத்தப்படாமல் இருப்பதே காரணமாக இருக்கலாம். அதனை அப்பிள்ளைகளுக்கு தெளிவுபடுத்தி பிறகு அந்தப்பிள்ளை வளர்ந்த பின் தான் தவறிழைத்த சந்தர்ப்பத்தை உணர்ந்துகொள்ளும் போது நன்றி சொல்லும் நமக்கு.
இதற்காக நான் எழுதிய ஒரு ஸ்டேடஸ் இது 'கானா காணும் காலம்' என்ற தொடரில் சொல்லப்பட்டது.கொஞ்சம் மெருகேற்றலுடன்
""என்னால் செய்யப்பட்ட உதவிக்காக அதே உதவியை எனக்கு உடனே செய்யவதை விட
கைமாறாக உதவி தேவைப்படும் வேறொருவருக்கு தருணத்தில் செய்துவிடுங்கள். உதவுதல் சங்கிலியாய் தொடரட்டும். தேவைப்படும் போது நானே கேட்பேன்""

ஒரு கவிதை:
சிறுவனாக இருந்தபோது (பதின்மூன்று வயதுகளில்) எழுதிய கவிதை இன்றைய சிறுவர்களுக்காக அப்படியே

அவனியில் வாழவேண்டில்..
பெற்றோர் குரு தெய்வம் போற்றவேண்டும் - சுற்றம்
ஏற்றமாய் வாழ்ந்திட முயலவேண்டும்
அகத்தினிலே அகிம்சை அரும்பவேண்டும் - அது
அன்பின் சொருபமாய் மலரவேண்டும்
அனாதையை ஆர்வமாய் அணைக்கவேண்டும் - அவர்க்கு
அருளாளனாக நீ ஆகவேண்டும்
அன்பனாய் எல்லோரும் ஏற்கவேண்டும் - உன்னை
அறம் நிறைகலமெனப் போற்றவேண்டும்
பாவத்தைப் பகைவனாய் எதிர்க்கவேண்டும் - உயர்
நீதியைத் தெய்வமாய் ஏற்கவேண்டும்
அகிலத்தில் அறவொளி பரப்பவேண்டும் - அதில்
அனேகரின் அகஇருள் அகலவேண்டும்
உயிரிலும் மேலது மானமென்று - உன்
ஒவ்வொரு செயலிலும் நிலவவேண்டும்
வள்ளுவன் வழியிலே வாழவேண்டும் - கலங்கரை
விளக்காக எல்லோருக்கும் உதவவேண்டும்.

முதியோருக்கு
"காவோலை விழ குருத்தோலை சிரிக்குமாம்" ஒரு பழமொழி. இதுவே முதியோரின் நிலைமையை உணராத முதிராதவர்களின் தன்மை.
வாழ்க்கைவட்டத்தில் பருவமாற்றம் இருப்பதை நாம் உணரவேண்டும். இளமை ஒரு நிலா காலம் என்றால் அது முதுமையில் கனா காலம். ஆக இளமையில் நாம் பெரியவர்களுக்கு பெற்றோருக்கு முதியவர்க்கு செய்யும் சேவை அவர்கள் மனம் புண்ணாகாத வண்ணம் அவர்களை பராமரிப்பதும் அவர்கள் கஸ்டங்களை பொறுத்துக்கொள்வதுமே.
இந்த காணொளியை நீங்கள் ஏற்கனவே பார்த்தாலும் இப்போதும் பாருங்கள் மொழி விளங்காவிட்டாலும் விடயம் எதுவென உள்ளத்துள் உறையும் குறும் படம்.



பிறந்தநாளின் போது

கடந்த சில வருடங்களாக எனது பிறந்தநாளை சிறுவர்களோடு கொண்டாடுகிறேன். அவர்கள் விரும்பிய தீன் பண்டங்களை வாங்கி கொடுத்து அவர்களுடன் சேர்ந்து விளையாடி மகிழ்வதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளேன். கடந்த ஆகஸ்ட் 7 எங்க ஊர் கடற்கரையில் நாம்

பதிவுலக போக்கு
இன்று ஒரு நண்பருடன் அரட்டையில் பகிர்ந்தது உங்களுக்காக

"காதலுக்கு கடலை மாதிரி பதிவர்க்கு புதிய படம்"

'சினிமா ரசனைக்கு மனத்திருப்திக்கு ஆக இருக்கணும் கொஞ்சம் பெரிசா உங்க பிள்ள வளர்ந்ததும் நீங்களே யோசிக்கத்தோன்றும் இல்லையா?'

'அத விட பதிவு எழுதி நீங்க எதை விரும்புறீங்க. பின்னூட்டம் (Comment) வாக்கு(Vote)??
அதை விட அந்தப்பதிவு எல்லோரையும் சென்றடையணும் அந்த செய்தி (message)யாருக்காவது போய்சேரணும்'

'இல்லையேல் பதிவும் சினிமா மாதிரியாகிவிடும் மொக்கையா'
'ரசிப்போம் பாடல்கள் காட்சிகள் கதை வசனம் நடிப்பு அங்கங்கே சிலிர்ப்பு போதும்'
என்னோட பார்வை இது உங்க பதிவு தவறாமல் பார்ப்பேன்
தப்பாக சொல்லியிருந்தால் மனதை காயப்படுத்தினால் ஆறிக்கொள்க'

'பின்னூட்டங்கள் அவசியம் நல்ல பதிவுக்கும் இருக்கணும் இருந்தால் இன்னுமின்னும் பதிவரை வளர்க்கும். இதை யாருக்கும் யாரும் செய்யத்தோன்றணும். நாம தெரிஞ்சவங்களுக்கு மட்டும் காமண்டு அடிப்பது போதாது பதிவுலகம் நல்லதாக வளரமாட்டாது."

3 comments:

கவி அழகன் said...

நெஞ்ச தொட்டுடிங்க நண்பா

Ramesh said...

@@யாதவன் said...

///நெஞ்ச தொட்டுடிங்க நண்பா///
நன்றி யாதவ்

anuthinan said...

சிந்தித்து செயல்படுகிறேன் அண்ணா!!!

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு