Pages

Tuesday, October 19, 2010

தாய்மையின் தாகம்


தலைவலி
அழுகின்ற நான்
தேசிக்காய்த் தேனீர்
சுடுசோற்று ஒத்தடம்

மடியினில்
முகம்புதைக்க
உன் கரங்களில்
என் கண்ணீர் துளிகள்

உச்சிமோந்துவிடும்
உன்முகம்

இல்லை என்று
நான் வெளியில்
தனிமையில்

உன் இடைவெளி
எனக்கு
தலைவலி

ஐந்து நாட்கள் பிரிவு
வாசல் கதவு திறக்க
வீடு சிரிப்பை
வர்க்கித்துக்கொண்டது

கடவுள் தேடி நான் வர
அம்மா கோயிலில்
அர்ச்சனை
என் நட்சத்திரத்தில்

காத்திருக்கிறேன்
சாமிவரும்வரை
வெறும் தேனீர் கோப்பையுடன்

12 comments:

Chitra said...

நெகிழ்ச்சி.....

Ramesh said...

@@Chitra said...
/// நெகிழ்ச்சி........////

நன்றிம்மா

Kousalya Raj said...

தாய்மை ஒளிர்கின்றது உங்கள் வரிகளில்...

தீபன் said...

"கடவுள் தேடி நான் வர
அம்மா கோயிலில்
காத்திருக்கிறேன்
சாமிவரும்வரை"

வாழ்த்துக்கள் றமேஸ், மிகவும் சந்தோசமக இருக்கிறது, சற்றே பொறாமையாகவும். எந்தவொரு அன்பையும் சிறிதேனும் இழந்துவிடாமல் அனுபவித்துவிடுங்கள்.

Ramesh said...

@@Kousalya said...

/// தாய்மை ஒளிர்கின்றது உங்கள் வரிகளில்...///
தாய்மை தேடிய குழந்தையாய் நேற்று ஆயினன் அஃதே வந்தது வரிகளில்
நன்றி கெளசல்யா

Ramesh said...

@@@தீபன்... said...

/////
"கடவுள் தேடி நான் வர
அம்மா கோயிலில்
காத்திருக்கிறேன்
சாமிவரும்வரை"

வாழ்த்துக்கள் றமேஸ், மிகவும் சந்தோசமக இருக்கிறது, சற்றே பொறாமையாகவும். எந்தவொரு அன்பையும் சிறிதேனும் இழந்துவிடாமல் அனுபவித்துவிடுங்கள்///

நன்றி தீபன்
நான் எழுத நினைத்த வரி அவை சில வரிகள் அதற்கிடையில் புகுத்தவேண்டியதாயிற்று.
அன்பு அரவணைப்பு மற்றவர்களிடம் இருந்து பெறவேண்டிய பொழுதுகளில் பெற்றுவிடவேண்டும்.

thiyaa said...

மென்மையான நெகிழ வைத்த கவிதை அழகு

Ramesh said...

@@தியாவின் பேனா said...

///மென்மையான நெகிழ வைத்த கவிதை அழகு///
நன்றி நன்றி

Kandumany Veluppillai Rudra said...

தொடருங்கள்,,,,,,

Theepan Periyathamby said...

மிக அருமை தொடருங்கள் நண்பரே

Ramesh said...

@@உருத்திரா said...

///தொடருங்கள்,,,,,,///
நன்றி

Ramesh said...

@@Theepan said...

///மிக அருமை தொடருங்கள் நண்பரே///
நன்றி

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு