Pages

Wednesday, June 8, 2011

என் தெரு

யார் யாரெல்லாம்
என் தெருவில் இப்பொழுது

என் தெரு
உணர்வுகளால் ஆனது
சாயங்கள் பூசப்படாத சாலை

உன்னைச் சூழ்ந்துகொண்டதே
சுத்திகரிக்கபட வேண்டிய காற்று
நான் சுவாசிப்பதே
உயிர்க்காற்று

உன்தன் சாலைகளில்
சலவை செய்யவேண்டிய
மனிதர்கள் அதிகம்

இங்கே
சேறுகளில் கால்கழுவி
வேர்த்து உழைத்து
மனம் சிரித்து
முகம் விரிக்கும்
கைகள் ஆயிரம்

என் தெரு
உணர்வுகளால் ஆனது
சாயங்கள் பூசப்படாத சாலை

நீ வந்து போ
நான் உன்னையும் நேசிப்பேன்
ஆனாலும் உன்வருகை
இயல்பாக இருக்கவேணும்



4 comments:

கடம்பவன குயில் said...

சாயங்கள் இல்லாமல் உணர்வுகளுடன் ஒரு சாலை. சுவாசிக்க ஜீவனுடன் உயிர்க்காற்று.இனிமையான வாழ்க்கை. அனைவருக்கும் அவசியமான வாழ்க்கை

பிரணவன் said...

மனித நிறங்களால் மிதி பட்டும். வண்ணம் மாறாத சாலைகள். . .அருமையான சிந்தனை. . .

ஹேமா said...

மனிதனை மனிதம் நிறைந்த மனிதனாக்க நினைக்கிறீர்கள்.
நல்லது றமேஸ் !

கார்த்தி said...

தெருவுக்கு பெயர் வையுங்க சார்! முதலில!

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு