Pages

Wednesday, November 2, 2022

இழப்பின் வலி

வாழ்க்கையின் வனப்புகளை இழக்கக்கூடாது. அன்பு, அரவணைப்பு, சின்னச்சின்ன சலசலப்புகள், கொஞ்சம் கோவம், சாப்பாடுகள், வந்தாரை வரவேற்று வாழுதல் என பல அம்சங்களில் வாழ்தல் வேண்டும். ஒவ்வொரு அணுவணுவாக வாழ்தல்வேண்டும்..

அவசரப் பொழுதுகள் என்று வேலை வேலை என்றோ.. மற்றவர்களோடு கதைக்ககூட நேரம் இல்லை என்று பம்மாத்தோகாட்டி வாழ்தலை விட இறத்தல் மேல். பணம் உழைப்பு என்று ஒரே அலைதலோ! நிம்மதி தொலைத்து நித்திரை குறுகி சிறிய வட்டத்துள் வாழ்க்கையை அமைத்தல் பொய்யானது.
பணம் வாழ்க்கையின் முக்கிய அம்சம் தான் ஆனால் இந்த கொவிட் பல இலட்சங்களை சேமிக்க கஸ்டப்பட்டவர்கள் உடல்கூட உறவினர் பார்க்கமுடியாமல் புதைத்தலும் எாித்தலிலும் ”வாழ்க்கை” எது? எதற்காக வாழவேண்டும் என்பதன் அர்த்தங்களை சொல்லிச் செல்கிறது.
ஓர் இறப்பு ”தற்காலத்தில்” நிகழ்ந்தால் முதல் கேள்வி ”எப்படியாம் செத்தாரு” என்பதன் அர்த்தம் கோவிட் இறப்பா இல்லையா என்பதை கேட்டு இறுதிகிாியை, மற்றும் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ளலாமா இல்லையா என ஏங்கும் உள்ளங்கள் அதிகம்.
அப்பாவின் இறப்பிலும் முதல் கேள்விக்கு முதலே ” இயற்கை எய்தினார்” என்று சொல்ல வேண்டிய தருணம் கடந்தோம்.
அனேக சாவீடுகளில் மக்கள் செல்ல அச்சப்படுதல் கண்கூடு.
எங்கள் வீட்டில் ஒவ்வொரு நாளும் தொற்றுநீக்கிக் கொள்கின்றோம். மாஸ்க் போட்டுக் கொள்கிறோம். பல்வேறு அன்பர்கள் வருவதால், பாதுகாப்பை மாஸ்க்குகளும் சனிடைசர்களுக்கும் தான் முக்கிய இடம்.
பொதுவாக மனநெருடல்களில் கைகொடுப்பது இதமான பாடல்கள் தான். ஆனால் உற்ற சோகம் தந்தையின் இழப்பு. இயற்கையின் அம்சங்களில் இதுவும் கடந்துவிடும். ஆனாலும் வாழ்தலின் அருமைகளை சொல்லித்தருகின்றது.
குடும்பப்பொறுப்பின் அத்தனை அம்சங்களை பட்டியல் படுத்துகின்றது.
ஆயிரமாயிரம் அனுதாப தொலைபேசி அழைப்புகளும் இணையவழித்தொடர்புகளும் பெருமையாக இருக்கிறது நாம் சமூகத்தில் வாழுகிறோம் என்று....
குடும்பத்தோடு வாழ்தல் வேண்டும். ஒவ்வொரு குழந்தையும் ”அம்மா” அப்பா” என அழைக்கும் ஒவ்வொரு கணமும் வாழ்தல்வேண்டும். ஆயிரமாயிரம் அன்பு இருக்க எதுக்கு கூடுதலை விட்டு பிாிதல் பற்றியோ கதைக்காமல், கூடாமலோ வாழவேண்டும்..
இடறி விழ தூக்கிவிடும் கைகள்
இதயம் கனக்க இளகிப் பேசும் இதயங்கள்
தன்மையாக குறுஞ்செய்திகள், குறிப்பொலிகள், குறிப்புகள் என அன்புவருடல்கள்.. ஆகா அன்பு ஒன்றே நிரந்தரம். நன்றி.
நிற்பதுவே,நடப்பதுவே,
பறப்பதுவே,நீங்களெல்லாம் சொற்பனந் தானோ?
பல தோற்ற மயக்கங்களோ? கற்பதுவே,கேட்பதுவே,கருதுவதே,
நீங்க ளெல்லாம் அற்பமாயைகளோ?
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ? வானகமே,இளவெயிலே,மரச்செறிவே,
நீங்களெல்லாம் கானலின் நீரோ?
வெறுங் காட்சிப் பிழைதானோ?
போன தெல்லாம் கனவினைப்போற்
புதைந்தழிந்தே போனதனால்
நானுமோர் கனவோ?
இந்த ஞாலமும் பொய்தானோ?
கால மென்றே ஒரு நினைவும்
காட்சியென்றே பலநினைவும்
கோலமும் பொய்களோ?
அங்குக் குணங்களும் பொய்களோ?
சோலையிலே மரங்க ளெல்லாம்
தோன்றுவதோர் விதையிலென்றால்,
சோலை பொய்யாமோ?
இதைச் சொல்லொடு சேர்ப்பாரோ?
காண்பவெல்லாம் மறையுமென்றால்
மறைந்ததெல்லாம் காண்ப மன்றோ?
வீண்படு பொய்யிலே
நித்தம் விதிதொடர்ந் திடுமோ?
காண்பதுவே உறுதிகண்டோம்
காண்பதல்லால் உறுதில்லை
காண்பது சக்தியாம்
இந்தக் காட்சி நித்தியமாம்.
------ பாரதியார்.

No comments:

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு