Pages

Wednesday, November 2, 2022

சாவீடும் சாமி அறையும்

இறப்பு ஒன்று நிகழ்ந்தால், முதலில் அவ்வீட்டு சாமிஅறையில் உள்ள படங்கள் சிலைகள் அனைத்தும் புறமுதுகுகாட்டப்படும். சாமி படங்கள் மட்டுமல்ல கொழுவப்பட்டு காட்சிப்படுத்தப்படும் எந்தப்படமானாலும் இதே முறைதான். சாவீட்டு முன்றலில் ஒரு பந்தல் கூரை, வெளியே வெள்ளைக் கொடி, சிலநேரங்களில் பதாதைகள். முதல் மூன்று நாட்களும் மாலைவேளையில், இளநீர் குரும்பை வெட்டப்பட்டு திறந்த நிலையில் மடையில் குத்துவிளக்குக்கு அருகில் வைக்கப்பட்டு பின்னர் வீட்டு வெளிவாசலருகில் வைத்து வணக்கம் செலுத்தப்படும். இறந்தவர்கள் ஆத்மா எங்களோடு இருப்பதாகவும் , மீண்டு வருதல், பார்த்தல், பருகுதல் என்பது ஐதீகம். கடமை என்பது இவ்வாறு ஆரம்பிக்கும். பின்னர் எட்டாம் நாள் நினைவேந்தலின் பின்னரே அம்மா தலைவாாி கட்ட முடியும். நாங்களும் முடி திருத்தம் தேவைப்படின் மழிக்கவும் முடியும். முப்பது நாட்களில் இயல்பு நிலையில் ஒரு மாற்றம். சந்தோச நிகழ்வுகளோ, கோயிலுக்கோ ஏன் மரண வீடுகளுக்கும் செல்லமுடியாத எழுதா மறைச்சட்டம். அம்மா சொன்னா நீ விரும்பினால் செல், ஆனால் இது நடைமுறை அப்பாவுக்கு உனது கடமை என்பதை அழுத்தி சொல்லியிருப்பதால், பக்கத்துவீட்டு ”மாளையம்” (இறந்தவர்களுக்காக புரட்டாதி மாத்தில் வருடா வருடம் நடைபெறும் நினைவேந்தல் அமுதுக்கு பெயர் மாளையம்) கூட என்னால் செல்லமுடியவில்லை. அப்பாவின் இறுதிக் கிாியை கடமைகளில் பங்கேற்க முடியாமல் போனவர்கள், ஒவ்வொருவராக, சிலராக வருகை தந்து அப்பா பற்றிய நினைவுப்பதிவுகளை உரையாடிச் செல்லும்போதுதான் ஏன் அந்த பழையைகாலத்திலேயே இன்னும் வாழ்ந்திருக்கலாம் என்று மனம் நினைக்கிறது. இன்று ஒரு அன்பர், ”ஒரு நாள் ஒரு சிறுபாதையில் பேரூந்து சென்றபோது படுவான்கரைப்பக்கம் ஒரு வயல் வெளியில் பேரூந்து தடம்மாறிட்டாம். ஒருவருக்கும் ஆபத்து இல்லையாம். அவ்வழியே அந்த அன்பர் செல்லும்போது அப்பாவைக் கண்டதும் உடனே போய் அவருக்கு உதவ உழவு இயந்திரத்தை தேடிக்கொடுத்து பேரூந்தை மீட்டனராம். அன்றிலிருந்து அந்த ஓட்டுனர் அவருக்கு பழக்கமானாராம். இத்தனைக்கும் அப்பா என்பதால் உதவிடவேண்டும் என்று மனம் இருந்ததாம். நல்லவர், மென்மையானவர்” என்று பகிரும்போது இன்னும் அப்பா வாழ்ந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. எத்தனை இழப்பு இது. இதே போல் தான் எத்தனைபேர் அப்பாக்கள் வாழ்கிறார்கள். வாழுவோம். அண்மையில் அன்பு Jeyakumar Paramsothy சேர் அப்பாவின் இழப்பின் ஆறுதலைத் தந்த பதிவு https://www.facebook.com/jeya.jeyakumar.1/posts/5040339592648510 திருப்பொற்சுண்ணம் பற்றி தொியாத விடயங்களை அறியத்தந்தார். நன்றி அவருக்கு. அதன்பின்னர் திருவாசகத்தின் பல பக்கங்களை வாசிக்க கிடைத்தது. திருவாசகம்-யாத்திரைப் பத்தில் மணிவாசகர் ”தாமே தமக்குச் சுற்றமும் தாமே தமக்கு விதிவகையும் யாமார் எமதார் பாசமார் என்ன மாயம் இவைபோகக் கோமான் பண்டைத் தொண்டரொடும் அவன்தன் குறிப்பே குறிக்கொண்டு போமா றமைமின் பொய்நீக்கிப் புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே. ” ஆம் நமக்கென்ன எல்லாமே பரம்பொருள் சிவபெருமானே என்பதை எனது தந்தை பல தடவைகள் கூறியதன் அர்த்தத்தை திறம்பட மணிவாசகர் கூறிய யாத்திரைப் பத்து வெளிச்சம். பாடலுக்கும் பொருளுக்கும் இங்கு காண்க. http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=8... அப்பாவை எல்லோரும் ”அத்தான்” என்று அழைப்பார்கள். காரணம் அனேகருக்கு அப்பா மச்சான் முறையினன். எள்ளிநகையாடும் அப்பா கள்ளம் கபடமற்றவர். ஆதலால் எல்லோரோடும் பழகுவார். எல்லாரையும் மதிப்பார். சுகமாக இருக்கும் அவரும் நானும் எங்கு சென்று வந்தாலும். ஒருக்காலும் மது அருந்தவில்லை. ஒரு கொண்டைக்டர் மது அருந்தவில்லை என்றால் யாரும் நம்ம மாட்டார்கள். ஆனால் என்னை சில பார்ட்டிகளில் நீ விரும்பினால் அருந்தலாம் என்று அனுமதித்தவர். சூது, மது, மாது இந்த மூன்றையும் நீ தவிர். நானும் தவிர்த்தேன். நீயும் அவ்வாறே இருக்கவேண்டும் என்று சொல்லித்தந்தவர். மது மட்டும் பழகினேன் ஆனால் தொடரவில்லை. ஓர் அன்பான அண்ணனோடு Sanjayan Selvamanickam அப்பாவின் இறுதி மூச்சு நிற்க முதல் மெசேஞ்சாில் அப்பா பற்றிய அன்பை பாிமாறிக்கொண்டிருந்தேன் ஆறுதலாக இருந்தது. ”கஷ்டமாக இருக்கிறது அண்ணா.. யாருக்கு கோல் பண்ணினாலும் அப்பா பற்றி அழ வருகிறது. . விளங்குது அண்ணா. என்ன வலி இது. சே... இந்த அன்பு என்றால் பெரிது தான்.” ”அனுபவித்து ஆக வேண்டும்.” ”கடந்து விடுவேன் என்று உறுதி.. ஆனாலும் மண்டை வெடிக்குது” ”கண்ணீர் வரக்கூடா சாப்பாடு உடல் வலிமையாக இருக்கணும் அவருக்காக” என்று கண்ணை பிதுக்கி வைக்க.... ஒரு லூசன் போல பொழிந்து தள்ளு என்ன டிசைன் அப்பா” ”வாய்ச் சொல் வீரரடி நாங்கள்” அன்பு வலிமையானது, ஒரு வஸ்துதான், உற்றவர்கள் இறப்பு வதைக்கும். எனது மகனைக்கூட வலிமையானவனாக்க வேண்டும். அப்பாக்கள் வாழ்ந்துகொண்டே இருப்பார்கள்.. படம் அக்காவீட்டு சாமி அறை
எந்தப்பாட்டுகேட்டாலும் அப்பா ஞாபகம் பாடலாசிாியர் -பா. விஜய் எழுதிய பாடலொன்று. பொம்பே ஜெயசிறி பாடிய ஹாீஸ் ஜெயராஜின் இசையில் அழகிய பாடலொன்றின் வாிகள். மிக மிகக் கூர்மையாய் என்னை ரசித்தது உன் கண்கள்தான் மிருதுவாய் பேசியே என்னுள் வசித்தது உன் வாா்த்தை தான் கண்களைக் காணவே இமைகளை மறுப்பதா வெந்நீர் வெண்ணிலா கண்ணீர் கண்ணிலா நானும் வெறும் கானலா -பா. விஜய் ஆனாலும் இந்த கடினமான நாட்களில் நேற்று, பல்கலைக்கழக விாிவுரையாளர் கலாநிதி ஒருவர் அழைப்பெடுத்து துயாில் பங்கெடுத்து கதைத்து. எனது முதலாவது தொழிநுட்ப பிாிவு மாணவன் ஒருவன் 1st Class உம் மற்றயவர் 2nd upper கிடைக்கவிருப்பதாகவும், இன்னும் உத்தியோகபுர்வ அறிவிப்பு வழங்கவில்லையாம். எனக்கு நன்றி கூறி, இவர்களை US scholarship இற்கு வழிசமைக்கு ஒத்துழைக்கவேண்டும் என்றும் கேட்டு ஒரு அரை மணிநேரம் ஒதுக்கி மாணவர்களது நடவடிக்கைள் எவ்வாறு முன்னேற்றலாம் என்றெல்லாம் கதைத்தது பெருமையாய் இருந்தது. நன்றி சேர் என்றேன். அப்பாவின் வழியே நாம் இருக்கிறோம். #அப்பா

No comments:

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு