Pages

Wednesday, November 2, 2022

இறந்தும் இறாவா நிலை!


அப்பாவுக்காக எத்தனை அனுதாபங்கள், எத்தனை துயர்பகிர்வுகள், அம்மாவைப் பற்றி எத்தனை நலன் விசாாிப்புக்கள்.... உண்மையில் இறந்துபோதல் இயற்கைதான். ஆனாலும் இறவா நிலை கொண்டுள்ளார் எமது தந்தை.!!
”அன்னமிட்ட கை....... ” என்று எங்கள் அம்மாவின் கரம் பற்றி அழுகின்றனர் வந்து அன்பை சொாிகின்றனர்.
அம்மா ஆயிரமாயிரம் பேருக்கு அன்னமிட அப்பா எந்தச் சலனமும் மனங்கோணலும் இல்லாமல் ”வாங்க இாியுங்கோ” என்று சொல்லும் பண்பையும் சொல்லியழத்தான் நாங்கள் வாழ்ந்தது வீடு அல்ல ”இல்லம்” என்பதை உணர முடிகிறது.
”ஒரே ஒரு பொிய கல்வீடாம் அப்பொழுது எல்லாரும் வருவாங்களாம், ஒரே ஒரு கலர் டிவியாம் ஊரெல்லாம் வந்து நிகழ்ச்சி பார்ப்பாங்களாம் ஒருவரையும் முகங்கடிக்காமல் அனுமதிப்பாராம்” தந்தையின் உணர்வு பொிது.
அம்மாவின் குடும்பப்பொறுப்பு பொிது. அனைத்தையும் அம்மாவிடம் ஒப்படைத்து உழைப்பின் மகத்துவத்தை சொல்லித்தந்து தந்தையே!!
தலைமைதாங்க மாட்டார். ஏழளனப்பார்வையில் ஓராயிரம் அன்பை தருவார். எனக்கு ஏற்றாற்போலே நகைச்சுவை. இருவரும் மனம் விட்டு பேசுவதை எப்போதும் விரும்புவார். எதையும் மறைக்காமல் சொல்லவேண்டும். எல்லாம் பேசுவோம். இப்பதான் அந்த இடைவெளி பற்றிய எண்ணம் வருகிறது.
மரம் நடணும், விதைப்பந்துகள் இப்படி செய்கிறோம்... என்றால் சந்தோசப்படுவார். ” உங்கட சேர் வரலையா...... அவர் அக்சிடன்ட் பட்டதாமே உனக்கு தொியாதா மகன் போகலையா அவர பார்க்க ” எப்படியப்பா தொியும் உங்களுக்கு” இவனுகள் தான் கதைச்சானுகள்.”...
நானோ என்சார்ந்தவர்களோ அவருக்கு எல்லாம் தொிந்து இருக்கும் அதை அறிதலில் ஓர் ஆனந்தம் அவருக்கு.
”யாவரும் அறிவரி யாய்எமக் கெளியாய்
எம்பெரு மான்”
உண்மையில் அப்பா நீங்களே!!
எனது கையெழுத்தே உங்களது பாணி!
90 ஆம் ஆண்டு பிரச்சனையில் உங்களோடு வேலைசெய்தவர்கள் ஓடி வர அவர்களை வீட்டில் தங்க வைத்து அனைத்தும் வழங்கி எங்கள் குடும்ப உறவினர்களாக்கினீர்கள். யாரென்று அறியாதவர்களின் கண்ணீர் துடைக்கும் விரல்கள் உங்கள் கரங்கள்.
ஆதலால் என்னவோ எந்தவொரு இராணுவமோ... யாரோ உங்களை பிடிச்சு விசாாிக்கவும் இல்லை, பிடிக்கவும் இல்லை ஒரு புன்சிாிப்போடு கடந்தீர்கள் அந்த இக்கட்டான சூழலையும். இன்றும் கண்ணுக்குள் உள்ளது.
"விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
விழுப்பொரு ளேயுன தொழுப்படி யோங்கள்
மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே
வண்திருப் பெருந்துறை யாய்வழி யடியோம்
கண்ணகத் தேநின்று களிதரு தேனே
கடலமு தேகரும் பேவிரும் படியார்
எண்ணகத் தாய்உல குக்குயி ரானாய்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே "
----- மாணிக்கவாசகர்
மருமக்களை தன்மகன்களாகவே பார்ப்பார். அவர்களை நேசிக்கவும் மதிக்கவும் சொல்லித் தந்தார். கடைசிவரையும் அவர்களை கைவிட்டுவிடாமல் பார்த்துக்கொள் என்றார்..
"இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டுகின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி
அறவா நீ ஆடும்போது உன்னடியின் கீழ்இருக்க என்றார்.
- (பெரியபுராணம், காரைக்கால் அம்மையார் புராணம்-60"
படம் மூத்த அத்தானுக்கு மருத்துநீர் வைத்தபொழுதொன்று

No comments:

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு