Pages

Thursday, August 23, 2012

மனசெல்லாம் மழையே


உயிர் கொண்ட இடமெல்லாம்
நீ பயிர்கொண்டாய்
படபடத்து படருகையில்
துளிதுளித்து ஈரம் தந்தாய்

இருக்கிறேனா
இல்லையா என்றவினா
இருக்கையில் இரண்டுமில்லா
இருப்பை
மனசெல்லாம் நிறைத்துவிட்டாய்

மழை நின்றதும்
உயிர்க்கொல்லும்
மரண அமைதியாய்
மனம்

நீ
மழையாகி
உன்நினைவு அலைகளில்
அலைகிறேன்

நான்கு கண்கள்
ஒருவழியில்
இருபார்வை
இலத்திரன்கள் பயணிக்கும்
இதயத்தில் இடமளிக்கும்

இலத்திரன் பாய்ச்சலில்
இடியும் மின்னலும் தான்
மழைதூவிச் செல்லும்
மனசெல்லாம்



Wednesday, August 22, 2012

இது ஸ்டேடஸ் -26

Aug 7, 2012
எத்தனை அறிவுரையும் கேட்கும்போது விளங்கிறதே இல்லை நாம் இன்னொருவருக்கு சொல்லும் வரை.##அனுபவம்##அறிவுரை

என் தந்தை, தாய் எழுதிய கடைசி எழுத்து, முதன் முதலாய் வளிமண்டல காற்றை சுவாசித்த நாள் கடக்கும்போதுதான் நிழல்களில் எந்தனை நிஜங்களில் சந்தோச ஸ்பரசங்கள்.. கண்ணீரின் தூறல்கள்.. எண்ணிக்கொள்ளப்படுகின்றன..##remembering Life##

இனிய பொழுதொன்றாய் ஆகட்டும்..##குழந்தையாகிறேன்

Aug 6,2012
அத்தனை சோகத்தையும் துவம்சம் செய்யும் வல்லமை இரண்டிடம் மட்டுமே
இசையும், குழந்தையும்

Aug 5, 2012
மனதார ஆரத்தழுவல் அவசியம். அன்பிற்கு மட்டுமே வேலி இல்லை.


4 August,2012
ஒவ்வொன்றாய் ஒவ்வொரு நாளாய் தோற்றுக்கொண்டே நகர்கிறது - வாழ்க்கை ,
வெற்றிபெறலாமென்ற எண்ணக்கிடக்கையில்.

4 August
உயிர்க்கொல்லும் நஞ்சு
உணர்வு
உயிர்கொடுக்கும் உணவு

11 July
வாழுமிதயத்தின் சுவரில் சில ஓவியங்கள் ஈரப்படுத்திக்கொண்டுதான் இருக்கும் கிழிந்த இருக்கையில்

9 July
கடவுள் அன்பு தந்தால் கடவுளுக்கு அன்பாகவும் இருங்கள்.
ஒருவர் உதவி செய்தால் அதே உதவியை அவருக்கு மாறாக செய்யாமல் உதவி தேவைப்படுகிற வேறொருவருக்கு செய்க

6 July
இன்னமும் மரண ஊர்வலம் நடத்திக்கொண்டிருக்கிறேன்.
புதைக்கவும் வழியில்லை புத்தாக்கவும் தெரியல. ##வாழ்க்கை##
நரகம் வாழ்தலில்## சொர்க்கம் கனவினில்

4 July
டேய் சத்தம் போடாதங்கடா எண்டு நான் சொல்ல "ஓகே சேர் எண்டு ஒருத்தன் சொல்ல, டேய் சத்தம் போடாதடா எண்டு இன்னொருத்தன் அவனுக்கு சொல்ல இப்படியே சத்தம் போட்டு கொண்டிருந்தானுகள். ##நானும் வகுப்பறையும்## வாழ்க்கையும்##ஈழ தமிழரும்##

17 June
அன்புள்ள 'அப்பா' உங்களுடைய சில கடமைகளை என்றோ நான் பொறுப்பெடுத்துவிட்டேன்.அவற்றில் சிலவற்றை செய்துமுடித்தும் விட்டேன். இன்னமும் உங்கள் அன்பு எனக்கு இருந்தால் போதும். விரல் பிடித்து நடந்துவர என்னால் முடியும்.##HAPPY FATHERS day##

30 June
எந்தன் கண்ணீர் துடைக்கும் விரல்கள் விரதம் இருக்கின்றனவா.... ##

19 June
உடல் தின்ற இசையா நீ
உயிர் கொல்லும் கவியா நீ
உணர்வுகள் மெய்ப்படும்போது.

17 June
கடவுள் மீது நம்பிக்கை என்பது எங்கோ ஒரு புள்ளியில் கட்டாயப்படுத்தப்படும் மற்றவர்களுக்காகவாவது. சாத்திரங்கள் கடவுளை நம்பித்தான் வாழ்கின்றன.

2 June
எந்ததேவதை ஆசிர்வதித்ததோ தெரியல ஆனா இன்னமும் ஒலித்துக்கொண்டே இருக்குது இந்த ஹார்மோனியம்.
இன்று இசைராஜா கொண்டாடுது பிறந்தநாளை அது இளை இசையாகி##happy birthday to Ilayaraja

28 May
சில நேரம் சில மனிதர்கள் பட்டியல் என்பது நீண்டதுதான்.... அனேகமானவர்கள் அழகிய பொழுதுகளை கடக்கிறார்கள்.

26 May
எப்போதும் மற்றவர்களின் சோகம் கவலை என்பது கடுமையாகத்தான் தாக்கிக்கொள்கிறது. அதே நேரம் மற்றவர்களின் சந்தோசத்திலே ஒரு திருப்தி. முன்னயதில் கண்கள் கலங்குகிறது பின்னயதில் புன்னகை ததும்புகிறது.## Feelings for others##

29 April
ஒரே அலைவரிசையில் இருப்பவர்கள் ஒரே இரத்தமாக எண்ணப்படுவர்,தமக்குள் இன்ப துன்பங்களை பகிர்ந்து வேதனையும் சோதனையும் சாதனையையும் கடந்து

29 April
சில அழுத்தங்கள் இருக்கும்பட்சத்தில் தேவையான கட்டாய வேலைகள் கூட செய்வதற்கு இயலாமல் போகின்றன. பிரச்சனை என்ன என்பதை கண்டுபிடிப்பதற்கே பல மணித்தியாலங்கள் கடக்கின்றன. அதற்குள் தீர்வு பற்றி யோசிப்பதா. ##வாழ்க்கைப்பிழை##

28 April
உன் அழைப்புமணியின் கணங்களை கடக்கும் வரை தவிதவித்துக்கொள்ளும் மனசு
##வன்முறை செய்யும் காத்திருப்புக்கள்##

27 April
கண்கள் உகுக்கும் கண்ணீர் அத்தனை அன்புகளையும் சொல்லிவிடுமா என்று தெரியவில்லை. இன்றுமுதல் இன்னும் ஓரிரு வருட ங்களுக்கு நீ இங்கு இல்லை எனக்குள் என்றும் இருக்கிறாய் என்று துடைத்துவிடுகிறது கண்ணீரை பாவப்பட்ட மனசு.#குடும்ப சுமைதாங்கியே சென்றுவா நண்பா#

27 April
பிரிகின்றபோது அழுகையும் நினைவுகளும் வந்துவிடுகிறன. எவ்வள வுதான் மறைக்க நினைத்தாலும் முடிவதில்லை. நட்புக்கு வலிமையே அன்பின் ஆரத்தழுவலும் உயிரோட்டமான உணர்வுகளும்தான். #
சென்றுவா நண்பனே. உனதுபயணம் பாதுகாப்பாகட்டும்#

26 April
சில நேரங்களில் தொலைந்து போகிறேன். சில நேரங்களில் தொலைவாகிப் போகிறேன். உன் தேடல்களில் தான் கண்டுபிடிக்கப்படுகிறேன்

21 April
சில விடயங்களில் சிலபேருக்கு முன்னோடியாக அவர்களுக்கு புதிய விடயங்களை அறிமுகப்படுத்துபவனாக இருப்பதில் மகிழ்ச்சி.
##தன்னிலை பெருமைப்படுத்தல்##

17 April
சில நேரங்களில் ஏதோ ஒரு வகையில் அன்பினால் அதிக பாதிப்புத்தான். ஓடுகிற நீரில் எதிர் நீச்சலைப் பற்றியே எண்ணிக்கொள்ளுது பாவப்பட்ட மனசு. நழுவிற மீனாய் ஆகு என்பது சேர்ந்து வாழும் உறவுகள் சொல்லுது. நான் தரையில் துடிக்கின்ற மீனாய்.
##வெறுப்பான உலக வாழ்க்கை.##

10 April
சிலபேர் திடீரென பிடித்துப்போகின்றனர். அவர்கள் இன்னமும் இணைந்திருக்கின்றனர். சிலபேர் திடீரென விலகிவிடுகின்றனர். அவர்களும் இணைந்திருக்கின்றனர். இரண்டிலும் பெரும் வித்தியாசம்

10 April
எந்த மனக்கஸ்டத்தையும் எந்தவொரு சந்தோசத்தையும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்திலே நகர்கிறது #முகநூலும் நண்பர்களும்#

9 April
புரிந்தும் புரியாமலும் தெரிந்தும் தெரியாமலும் என்றாலும் இருந்தும் இல்லாமல் என்பதை மட்டும் ஏற்க மறுக்குது

8 April
உன் சிரிப்பின் சப்தங்களில் எத்தனை ஈரங்களை - நான் உலர்த்திக்கொள்வது. ##சிரிப்பும் காயம் செய்யும்##

இன்றைய படம்
ஊரிலிருந்து ஒரு பின்னேரப்பொழுதொன்றில்


Sunday, April 8, 2012

இது ஸ்டேடஸ் - 25


1 March
"ஓடும் புளியம்பழமும் வாழ்க்கையை இப்பொழுது கற்றுக் கொண்டிருக்கிறேன். நகமும் சதையும் என்பதிலிருந்து பெற்றவைகளைக் கொண்டு"

1 March
"ஓடும் புளியம்பழமும் வாழ்க்கையை இப்பொழுது கற்றுக் கொண்டிருக்கிறேன். நகமும் சதையும் என்பதிலிருந்து பெற்றவைகளைக் கொண்டு"

2 March
சில இரவுகள் இறப்பதற்காக சிலநேரம் பிறப்பதற்காக
விடியல்களும் தான்..... ஆரம்பமும் முடிவும் போராட்டங்களிலே தான்
2 March
எந்தவொரு மனக்கஸ்டங்களையும் பகிர்ந்துகொள்ள நண்பனொருவன் வேண்டும்.. ஆனாலும் நண்பியிடம் ஆழ்ந்த அன்பு கிடைக்கும் நண்பனிடம் நல்ல தீர்வுக்கு வழிகிடைக்கும். ##நண்ப நண்பிகளுக்கு#

4 March
அனேகம்பேர் தங்களுக்கான ஆதாரங்களை வெளிப்படுத்தி நல்லவன் என்பதை நிரூபிக்கும் எண்ணத்தை வளர்ப்பதிலே இருக்கிறார்கள் (நானும் தான்)..
ஆனாலும் முதலாவது ஒருவன் வரணும் என்றால் இரண்டாம் மூன்றாம் என பின்னால் வருபவர்களாலே தான் முதலாவதை எட்டமுடியும்.
#வாழ்க்கைப்போக்கு##

6 March
ஏதோ தற்செயலாகக்கூட ஒரு முறையேனும் விட்டுவிலகிவிடக்கூடா தென்றே எண்ணுகின்றேன். ஆதலால் யாரோ என்றெண்ணி பச்சை நிறத்தை அழுத்துவதைவிடுத்து சிவப்பை அழுத்திவிடாதே ##நான் என்றும் உன்னுடன்##

7 March
என்னைச் சுமந்து ஆளாக்கிய அம்மா, என்னோடு ஆன சகோதரிகள், சேர்ந்து சேராமல் போன காதலி, எனக்காக ஆளாகப்போகும் மனைவி... இன்னும் என... பெண்கள் தின வாழ்த்துக்கள் நாளைய தினமும் உங்களுக்காக.

9 March
எதிர்பார்க்காமல் இனிய பின்னேரப்பொழுதொன்று கடந்துபோனது.. முகம்புரியா நண்பர்களுடன் முகம்பார்த்தோம். கைலாகு கொடுத்து விடைபெற்றோம்.. ##நட்புடன் தொடர்வோம்##

11 March
சிலநேரம் கண்களில் வழியும் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடிவதில்லை அதுவாக அழு து ஆர்ப்பரித் து அடங்கிக்கொள்ளும் வரை. ##துன்பங்களும் வாழ்க்கையில் ##

12 March
காற்றில் பறந்து திரிந்த காதல் பறவையின் இறக்கை
தவறி விழுகிறது உந்தன் காலடியில்
காதலிக்க வேண்டி

12 March
எதிர்பார்த்தது தவறிவிட்டது.... இல்லை முயற்சியின் அளவு போதாமல் போயிற்று.
12 March
மற்றவரின் கண்ணீரில் எனது காயத்தை ஆற்றுகிறேன்.

14 March
இன்றைய பொழுது ஏனோ அமைதியாய் முட்டி திரண்ட கனத்த இதயத்தின் கண்கள் கலக்கத்தினாலும் என


18 March
அதிக நாட்களின் பின்னர் அமைதியான ஆளாய் இருப்ப து பிடிச்சிருக் கு. Silent ஆக இருந்தா violent ஆக இருப்பதாக சிலபே ரு சொல்லும்போ து என்னசெய்வ து. இதுவும் கடந்துபோகட்டும்...

21 March
நான் மேய்ந்ததெல்லாம்
என் ரத்தமான து
என் மடி
ரத்தத்தை பாலாக்கியது
முட்டி குடிப்பவர்களுக்கும்
கறப்பவர்களுக்கும்
என்மடி பால் சுரக்கிறது
குடிப்பதற்கோ கறப்பதற்கோ
யாரும் இல்லை என்றாலும்
என் பால் காம்புகளின் வழியே
கசிந் து சிந்துகிற து. ................
மேய்ச்சல் - கவிகோ அப்துல் ரகுமான்..##பறவையின் பாதை##வாசிக்கும் போது

23 March
வானொலிக்குயில் ராஜேஸ்வரி சண்முகம் அம்மையாரின் இறுதி நீள் நித்திரை பூரணமடையட்டும். இதய அஞ்சலி.


28 March
மெல்லிய இழையோடும் பாடல்கள் இல்லாத உலகத்தை ஏற்க மறுக்கிறது இசையோடு வாழுதல் இன்பத்தோடு இருத்தலே

30 March
நாளைய நாளை மனதை இலேசாக்கும் ஒ ரு பயணத்துக்காய் ஆயத்தமாய், கமெராவும் நானும் என முகநூல் நண்பனையும் சந்திக்க கஸ்டப்பட்டுக்கொண்டிருக்கும் மனதுக் கு ஒ ரு இடைவெளியாய் ##நல்லதாய் நடக்கட்டும்##

2 April
ஒவவொரு புன்னகையும் சொல்லிக்கொள்ளும் துக்கம் கலைக்கும் மருந்து என்னிடம் என்று...

2 April
இதழ்முட்டி என்றோ குனிந்து நிமிர்ந்து
இல்லை என்றும் ஓம் என்றும் சொல்லிக்கொண்டு போன கணப்பொழுதுகள் இசைக்கப்படுகின்றது மெல்லிய பாடல்களின் இசையில்

2 April
காற்று உறுமும் 'ஓசையுடன் மழை. நித்திரை இனிதாகட்டும்.

3 April
ஒவ்வொரு நாளும் ஹரிகரனின் பிறந்தநாள் வராதா.. ##வானொலிகளில் பாடல்கள்##

4 April
எதிர்பாரத சந்திப்புக்கள் அழகாய்த் தான் இருக்கும். நண்பனொருவனின் பிறந்தநாளில் அவனுடன் சாப்பாடு, உந்துருளி ஓட்டம் என இரு மணித்தியாலங்கள் கடந்தது.
##இனிமையான பொழுதொன்று கடந்து போகிறது##

5 April
உன்னோடு அலைபேசியில் பேசாத நாட்கள் என்னவோ என்னைவிட்டுப் நீ பிரிந்ததாய் உணர்கிறேன்.
ஆதலால் ஒருதரம் தவறிய அழைப்பொன்றையாவது ("மிஸ்ட்கோல்") கொடுத்துவிடு. ##நட்புக்களுக்காக##

6 April
கடக்க கடக்க கொஞ்சம் கொஞ்சமாய் நிரம்பிக்கொள்ளும்.
ஆனால் இன்னமும் நிரம்ப வேண்டிய இடைவெளி இருந்துகொண்டே இருக்கும்...##வாழ்க்கை##

7 April
எந்த நல்லவிடயத்தையும் யாரிடமும் சொல்ல எண்ணத் தோன்றலாம். அத்தனை கஸ்டங்களின் வலிகளை உணர ஓர் ஆணுக்கு பெண்ணும் பெண்ணுக்கொரு ஆணும் அவசியப்படுகிறார்கள்.

8 April
உன் சிரிப்பின் சப்தங்களில் எத்தனை ஈரங்களை - நான் உலர்த்திக்கொள்வது. ##சிரிப்பும் காயம் செய்யும்##

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு