Pages

Monday, September 14, 2009

வசிகரா .........

விழி விதைத்து
மொழி தடுத்து
உளி கொடுத்து
கவிதை செதுக்க வைத்து
உயிர் கொடுத்து
உறவுக்கு வழி வகுத்து
உணர்வுக்கு மொழி கொடுத்து
என்னை வசீகரித்தவனே
மலரின் மணமாய்
வாழத்துடிக்கும்
மனம் புதைத்து
எங்கே உன் பொன்மடிஎன
தேடும் தினம் உன்னை நினைத்து

மொட்டுவிட்ட நிலவு
தொட்டுவிட்டது இரவை
கட்டவிழ்ந்த விண் மீன்கள்
சட்டென்று எழுந்தன
புது உறவில்
கண்டுவிட்ட மேகம்
அட்சதை பொழிய
என் கண்களில் பட்டுவிட
உணர்வுகளைத் தொட்டுவிட
எங்கே உன் பொன்மடி என
மனம் தேட தினம் தூங்க

No comments:

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு