காதல் வானில்
நிலவு - உன்னை
முத்தமிட்ட மேகம்
நான்....
மரணத்தின் பின் துடிக்கும்
மனங்கள் போல
உன் ஞாபகத்தில்
சோகத்தின் தாரமாய்
குடித்தனம் நடத்தும்
இவன்
இன்னும் நீ வருவாய் என
காத்திருக்கிறேன் தனியே....
கவிதைக்கு அர்த்தம் சொல்ல வந்து
என் மேல் நீ விதைத்த
நாற்று
இதயத்தில் வீசும் காற்று
நாற்று
கிளைத்து வளர்வதற்கிடையில்
சிதைக்கப்பட்டு விட்டது
சிதைந்த துண்டுகளுடன்
இதயமும் துளிர் விடுமென
நானும்
மலர்க்கொத்துக்களாய்
உன் நினைவுகள்
மனதில்
இன்னும் நீ வருவாய் என....
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment