Pages

Sunday, September 13, 2009

கிராமிய ஏக்கம்

மாமரத்தோப்புல ஆவாரம் பூ
நீ சூட எனக்கு
மாங்குயிலே பாட்டுப்பாடி
மயிலே ...குயிலே......
மல்லிகைப் பூவே என்றாயே
மாமரத்தோப்பு
சுனாமியில் போயிற்று
ஒன்னப்போல
ஒன்பாட்டு மட்டும்
மனசுல இருக்கு
நெசமா..


இட்டடி கண்டு என்மேல
நீ வெதைச்ச கண்ணால
ஏன் கால் கொலுசு சிணுங்கமுன்
கிட்ட நிண்ட ஒன்ன
எட்டிப்பார்க்க முடியாம
ஏன் கைவளையல்க நழுவ
நீ பிரிய நெஞ்சம் காய
வந்து சேர கவிதை மலர
நான் பட்ட பாட
தொடைகிற மருந்து
ஏன் உள்ளத்தில
உறவுப்பாலம் கட்டிய
உன் பாச விழிகளின்
காதல் வார்த்தைகளே ......

No comments:

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு