நீயாக வீழ்ந்து கொள்ளவுமில்ல
நானாக மாட்டிக்கொள்ளவுமில்ல
தானாக நாமானோம்
இன்று
நீ நீயாக
நான் மட்டும்
யாரென்று தெரியல
ஏனென்றும் புரியல
இன்னும் உன்னிடம்
அடகுவைக்கப்பட்ட
என்மனது
வங்கியில்
மீட்கப்படாத என்வீட்டு
தங்கச்சங்கிலி போல
தொலைதூர தென்றலும்
என்மனசை
தொட்டுவிட்டுச் செல்லும்
உன் எஸ்எம் எஸ்
படிக்கையிலே
இந்த வேகார வெயிலிலும்
செருப்பிலாமல் நடக்கத்தோன்றுது
நீ விட்டுச் சென்றதாலே
ஆனாலும்
சுகம் காணும் காதலை விட
வலி பிடிச்சிருக்கு
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
வணக்கம் உங்களுடைய ஆக்கங்கள் எல்லாம் நன்றாக உள்ளது
உண்மையாக காதலித்து இருந்தால்
வலி கூட இன்பமாக இருந்திருக்கும் .....
சிலர் சநதற்பத்துக்கு அல்லவா காதலிக்கிறார்கள் ...
இதில் நீங்கள் எந்த ரகமோ
இப்படிக்கு
நட்புக்காக ஜெயா.சி
மரப்பாலம்
காதலித்ததின் உணர்வா? இல்லை கறபனையின் உணர்வா?தமிழ்பிள்ளைமணி by
மீண்டும் மீண்டும் படிக்க தோன்றுகிறது உங்கள் கவிதைகளை .....
Post a Comment