Pages

Thursday, September 10, 2009

காதல்

உன் உள்மனம் கண்டு 
ஓரவிழிப் பார்வைகளால்
வலியும் கொண்டு
வரமறுத்த வார்த்தைகளும்
சொல்ல துடித்த உணர்வுகளும்
தருகின்ற வரிகளால்
உள்ளக்காகிதத்தில் விழிகள் எழுதும்
மௌனக்கவிதை

நீ என்னை ஆளத்துடித்தாய்
நான் உன்னில் மூழ்க நினைத்தேன்
இருவரையும் குடித்துவிட்ட
அமுதசுரபி
காதல்

அந்த 
இரு (பால்) பூச்சிகளும்
விழுந்த 
ஒளிவிளக்கு

அவனும் அவளும்
சுவாசிக்கும்
இன்பக்காற்று.....



No comments:

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு