Pages

Friday, October 9, 2009

பெத்தவளே உனக்காக




வெளிநாடு போகணும்
கொத்துக் கொத்தாய் உழைக்கணும்
எண்டாலே போதுமே
பெத்தமனுசு உன் நெஞ்சம்
விடவில்லையே என்னை
வெளியூருக்கும் வேலைக்கு
அனுப்பலையே
முந்தானையில வச்சிருக்கே
முடிச்சுக்கட்டி...

பெத்த மனம் பித்து
பிள்ளை மனம் உன் சொத்து


இடப்பக்கம் வலப்பக்கம்
எண்டாலும் நான்
நீ வரும் பக்கமே
என் தலைப் பக்கம்
தானம்மா


வேகார வெயிலிலும்
செவரோரம் தூங்காம
உன் மடி வேண்டி
நான் தூங்க - கண்டு
என் நெனப்பில் நீயும்
சற்று கண்ணயர...

உம்மேல கால் போட்டு
ஒருக்கணிச்சு நான் படுக்க
நித்திரையிலும் நீ
காலாட்ட என்னை
தாலாட்ட
நீ அயர நான் துயில
சொர்க்கமே உன் மடியில


உன்ன தூக்கி பிடிக்கையில
"விடுடா இடுப்பெலும்பு
நோகுது" எண்டு
சத்தம் நீ போடயில
வலிச்ச நெஞ்சு
கையிறக்கி நம்ம
இருவரும் போடுற
முத்தம்
போதுமம்மா நானும்
உனக்கு தாயயம்மா..


வயசுக்கு வந்தவுடன்
தலையணையோடு
தள்ளி வச்ச
தலையில் சின்ன வலி
எண்டாலே
தவிச்ச உன் நெஞ்சு
வந்து தடவிடுமே
உன் கை ரெண்டு
தலைப்பாரம் இறங்கிடுமே
வந்த வலி போயிடுமே

என் தங்கப்பொன்னே
என் தங்க பெண்ணே
அம்மா
இந்தா இன்னுமொரு
முத்தம்..

5 comments:

Theepan Periyathamby said...

நல்லா இருக்கு ,
வாழ்த்துக்கள்

Ramesh said...

நன்றி ஜெ தீபன்

அருண். இரா said...

உன்ன தூக்கி பிடிக்கையில
"விடுடா இடுப்பெலும்பு
நோகுது" எண்டு
சத்தம் நீ போடயில
வலிச்ச நெஞ்சு""

அசத்தல் போங்க !! உள்ள என்னமோ பண்ணுது !! அப்புறம் நன்றி" மச்சான்ஸ்" பதிவ உங்க தளத்துல சேர்த்ததுக்கு !!
http://machaanblog.blogspot.com/

Ramesh said...

நிஜமா என் அம்மா சொலுறது வரிகளில் வந்தது. என் அம்மா கூட சந்தோசப்பட்டார்

Ramesh said...

நன்றி அருண்

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு