Pages

Saturday, November 28, 2009

டென்மாக் கொபன்ஹேர்கில் காலநிலை மாற்ற மாநாடும் உலக நாடுகளும் -டிசெம்பர் 2009

உலக பொருளாதாரம் இப்போது காலநிலைமாற்றத்தின் பிடியில் சிக்கித்தவிக்கிறது. அதேபோல் உயிர்க்கோளம் மற்றும் உயிர்களின் நிலவுகையும் கேள்விக்குறியாகியுள்ளது. காபநீரோட்சைட்டு வாயுச் செறிவாக்கம் அதனாலான புவி வெப்பமடைதலும் ஓசோன் படை சிதைவும், இதன் பாரிய விளைவான துருவப் பனிப்பாறைகளின் உருக்கம் கடல் நீர் மட்ட உயர்வு போன்றவற்றால் காலநிலை மாற்றமடைந்து வருகிறது, இதற்கு மிக மூல காரணம் மனித சமுதாயமே. அதலால் இதற்கு முழுப்பொறுப்பையும் ஏற்று ஒரு உகந்த தீர்வைக் கட்டியெழுப்ப வேண்டியது நாங்களே.

டென்மார்க்கின் தலைநகர் கொபன்ஹேர்கில் டிசம்பர் மாதம் 7-18 ஆந் திகதிகளில் மாறிவரும் காலநிலையால் உலக நாடுகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அதற்கான தீர்வுகளை எடுக்கும் பொருட்டு கால நிலை மாற்றம் சம்பந்தமான ஐக்கிய நாடுகளின் மாநாடு (United Nations Climate Change Conference 2009) நடைபெறவுள்ளது. இதில் உலகின் முக்கிய நாடுகள் பங்கேற்கவுள்ளன.


பச்சை வாயு வெளியேற்றம், தொழிற்சாலையின் கழிவுகள், போக்குவரத்து, நவீன ஆயுதங்களின் பயன்பாடுகளால் காலநிலை மாற்றமடைகிறது. இதை எவ்வாறு கட்டுப்படுத்துவதென்பதை ஆராயவும், அதற்கான தீர்வுகளை முன்வைக்கவும் காலநிலை மாற்ற மாநாடு வழிகோலும் என்பது திண்ணம்.

இதற்கு முன்னோடியாக கடந்த ஒக்டோபர் 17 ஆந் திகதி மாலைதீவில் கடலுக்கடியில் அமைச்சரவை மாநாடு நடத்தப்பட்டு அந்நாடு கடலில் மூழ்கவுள்ள அபாயம் உலகுக்குக் காட்டப்பட்டது.


மேலும், சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் நீடித்த பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கான வழிவகைகள் குறித்தே இம்மாநாட்டில் கவனம் செலுத்தப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த மாநாட்டில் ஆக்கபூர்வமான உடன்படிக்கைகள் எட்டப்படுவதற்கான சாத்தியங்கள் இல்லையென முன்னர் விசனம் தெரிவிக்கப்பட்டது. பின்னர் இம்மாநாட்டில் 60 உலகத் தலைவர்களும் 192 நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்து கொள்ள இருப்பதனால், இம் மாநாடு தொடர்பான எதிர்பார்ப்பு இப்போது அதிகரித்துள்ளது . காபனீரொட்சைட் வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான இலக்குகளைக் கொண்ட புதிய உடன்படிக்கை ஒன்று உருவாக்ப்பட இருப்பதாகவும் அறியப்படுகிறது.
உலகளவில் அதிகளவு காபநீரோட்சைட்டு போன்ற பச்சைவீட்டு (Green House) வாயுக்களை வெளியேற்றும் நாடுகள் பட்டியலில் முதன்மை வகிப்பவை உலக வல்லரசுகளும் குழு 8 (G8) மற்றும் குழு 10 (G10) போன்ற கைத்தொழில் நாடுகளுமே. இதனால் இந்நாடுகளின் தலைவர்கள் (உலகளவில் காபனீரொட்சைட்டை அதிகளவில் வெளியேற்றும் சீனா, அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகளின்) பங்கேற்பது சந்தேகமாக உள்ளதாக சொல்லப்பட்டது.


பின்னர் பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிறவுண் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, சீனப் பிரதமர் வேன் ஜியாபோ ஆகியோர் தங்கள் வருகையை உர்திப்படுத்தியுள்ளனர் என்பது மிகவும் மகிழ்ச்சிதரக்கூடியதே.
இதனிடையே ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கி மூன் இது பற்றிக் கருத்து தெரிவிக்கையில் பூகோள வெப்பமடைதலைத் தடுக்கும் போராட்டத்தின் மிக முக்கிய திருப்புமுனையாக  இம்மாநாடு அமையும் என்று கூறியுள்ளார்.
இந்த மாநாட்டில் அமேரிக்கா பச்சை வீட்டு வாயுக்களின் வெளியேற்றத்தை குறைப்பது பற்றி உத்தியோக பூர்வ அறிக்கையில் 2005 ஆம் ஆண்டிலிருந்து 2020 ஆம் ஆண்டு வரைக்கும் 17 % சதவீதக் குறைப்பும் அதிலிருந்து 30 % குறைப்பு 2025 ஆம் ஆண்டு வரைக்கும் பின்னர் 2030 ஆம் ஆண்டுகளில் 42 % சதவீத மாக குறைக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் கடந்த புதன்கிழமை திரு. ஒபாமா அவர்கள் தெரிவித்துள்ளார்.


இருந்தாலும் உலக காலநிலை மாற்றம் பற்றி கருத்துத் தெரிவிக்கும் விஞ்ஞானிகள், இதற்கு முன்னர் கைச்சாத்திட்ட கியோடோ உடன்படிக்கை 2012 ஆண்டுகளில் முடிவடைய இருப்பதனால் பூகோள வெப்பமாதலின் பாரிய தீங்கு விளைவுகள் மேலும் மேலும் ஏற்பட இருப்பதனால் இந்த மாநாட்டில் மிக உன்னதமான வலுப்பெற்ற ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்தப்பட வேண்டும் என்று ஆவலாய் உள்ளார்கள்.

காலநிலை மாற்றம் குறித்த விவகாரத்திற்காக தயாரிக்கப்பட்ட முக்கிய தரவுகள் மின்னஞ்சல்கள் மூலமான ஊடுருவல் மூலம் திருடப்பட்டிருப்பதாக காலநிலை மாற்ற விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் இது குறித்த பகிரங்க விசாரணையொன்றும் நடத்தப்பட வேண்டுமென அவர்கள் கோரியுள்ளனர் என்று பி.பி.சி தகவல் வெளியிட்டுள்ளது

பாருங்கப்பா இதிலேயும் புல்லுரிவிகள் தாக்குதல் நடத்துகிறார்கள்
எது எப்படியோ உயிர்க்கோளத்தைக் காக்க இந்த மாநாடு ஒரு தீர்க்கமான முடிவை எட்டுவதற்கு எமது வாழ்த்துக்கள்

4 comments:

Admin said...

பகிர்வுக்கு நன்றிகள்

Ramesh said...

வருகைக்கும் பின்னூட்டலுக்கும் நன்றி

ஜெ.ஜெயமார்த்தாண்டன் said...

றமேஷ்

விஷயமுள்ள பதிவு. தொடருங்கள்

Ramesh said...

///விஷயமுள்ள பதிவு. தொடருங்கள்///

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
தொடர்ந்திருங்கள் ஜெயமார்த்தாண்டன்

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு