Pages

Monday, January 31, 2011

தேசத்தின் குரல் ஊமையாய்


கண்கள் விழித்துக்கொண்டு
இரவுகளாய்
கனவுகள் நெய்யப்பட்டு
பகல்களாய்
உயிர்கள் தொலைக்கப்பட்டு
அலைகளாய்

நீண்டுகொண்ட
இழப்புக்கள்
நெரிசல்களில்
சிக்கிக்கொண்ட
உணர்வு

கேள்விக்காகவா
செய்திக்காகவா
படங்காட்டுவதற்கா
பாமரன்
ஆனதற்காகவா

தலையெல்லாம்
வால் ஆனதா
தசையாட தான்
ஆடாதோ
சதை விட்டு
நகம்
தனியாக முளைக்குதோ..?

தமிழ்
உயிர்
மூன்றெழுத்து வரிசையில்
உடல் பிரிந்தனவோ


ஊமைகளின் பேர்வழியாய்
ஊமையாய்
நானும்


8 comments:

ஹேமா said...

கரைக்கு வெளியிலும் கரைக்குள்ளும் அகப்படுவது தமிழ் உயிர்கள்தானே !

Chitra said...

ஊமைகளின் பேர்வழியாய்
ஊமையாய்
நானும்


.......நானும். :-(

யோ வொய்ஸ் (யோகா) said...

:(

நிரூஜா said...

:|

KANA VARO said...

வலிகள் சுமந்த வரிகள்!

நிரூபன் said...

உயிர்கள் தொலைக்கப்பட்டு
அலைகளாய்//

வார்த்தைகளால் வலிகளுக்குச் சாமரம் வீசுவது போன்ற கவிதை. பல உணர்வுகளை மறைமுகமாகப் பேசிச் செல்கிறது.

தமிழ்
உயிர்
மூன்றெழுத்து வரிசையில்
உடல் பிரிந்தனவோ//

கேள்விகளை நாங்கள் எங்களை நோக்கிக் கேட்டு பதில் தெரிந்தும் எம் தலை மீது இதற்கும் நாம் தான் காரணம் என குட்ட வேணும் போன்ற உணர்வினைக் கவிதை தருகிறது.

Jana said...

நீண்டுகொண்ட
இழப்புக்கள்
நெரிசல்களில்
சிக்கிக்கொண்ட
உணர்வு...

Ramesh said...

அனைவருக்கும் நன்றி

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு