Pages

Thursday, November 12, 2009

மௌனம் கலையட்டும்

காதலர்களே
உங்கள் மௌனத்தைக்
கலைத்துவிடுங்கள்
காதுகளைக்
கூர்மையாக்குங்கள்



நீயாகிய நான்
நானாகிய நீ என்று
உங்கள் உணர்வுகளை
உங்களுக்குள்ளே
புதைத்துக்கொள்ளுங்கள்
உங்களை
இடம்மாறித்
தடம் மாறாமல்
தேடிக்கொள்ளுங்கள்



உறவுகள் உணர்வுகளாக
உரிமைகள்
தனிமைகளாகட்டும்

உள்ளக் குமுறல்கள்
எடுத்துச் சொல்லப்படட்டும்
கள்ளம் கலையட்டும்
கலைந்த காதலும்
துளிர்விட்டுக்கொள்ளும்

காத்திருப்புக்கள்
காதலின்
கதவடைப்புக்கள்
காத்திருந்தால்
காதலின் நீளம்
அளந்துகொள்ளுங்கள்



விட்டுக்கொடுப்புக்கள்
உள்ளப் புரிந்துணர்வுகள்
கள்ளமில்லா வார்த்தைகள்
காதலின் கவிதைகள்
காலத்தை வென்றவை



வெள்ளை மனதை
இன்னும் வெளிச்சமாக்குங்கள்
காதல் ஒளிரட்டும்
காதலோடு ......



5 comments:

சாம்பசிவம் கஜன் said...

விட்டுக்கொடுப்புக்கள்
உள்ளப் புரிந்துணர்வுகள்
கள்ளமில்லா வார்த்தைகள்
காதலின் கவிதைகள்
காலத்தை வென்றவை

Ramesh said...

கஜன் உண்மைய சொன்னன் அவ்வளவுதான்

hari said...

தாங்கள் கவிதை சாவடியாக உள்ளது..தங்களது பணி தொடர வாழ்த்துக்கள்..

Ramesh said...

நன்றி ஹரிகாலன் உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும்

A.R.ராஜகோபாலன் said...

காதல் மொழி பேசி
காதலின் வழி முறைகளையும்
காதலின் விதிமுறைகளையும்
காதலின் வழியே சொன்ன விதம்
அபாரம்
வாழ்த்துக்கள்

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு