Pages

Friday, January 7, 2011

இலேசாக இருங்கள்

நீங்கள் இல்லாமல்
நான் ஆனது இல்லை

என் ஒவ்வொரு வெற்றியையும்
மகிழ்ச்சியாயும்
ஒவ்வொரு தோல்வியையும்
வெற்றிப்படியாகவும்
சமவிகிதத்தில் ஏற்றொழுகி
தோள் தடவிவிடும்
உங்களது கைகள்
கடவுளின் உன்னத ஸ்பரிசங்கள்

உங்கள் குழந்தை மனசு
என்னை இன்னுமின்னும்
ஆளாக்கும்
ஆளுமையானவனாய்

உங்கள் பேரன்
நான் சுருண்டு விளையாடி
ஓய்வெடுக்கும் உங்கள் மடியில்
இன்பங்களையும் நுகர்ந்திடுவான்
என்கிற எண்ணத்தில்
'தந்தையாகணும்' என்ற
எண்ணம் இன்னும் வந்ததில்லை

உங்கள் உடம்பு தேறவேண்டும்
உங்களுக்கான
என் பிராத்தனைகள்
உங்கள் உளவுறிதியைக்
கூட்டிக்கொள்ளும்

7 comments:

தர்ஷன் said...

நன்றாயிருக்கிறது

ஹேமா said...

றமேஸ்....போன வருடத்திலும் அப்பாவுக்குச் சுகமில்லையென்றீர்கள்.
கவனித்துக்கொள்ளுங்கள்.நிச்சயம் அவர் மடி பேரனைச் சுகமாயச் சுமக்கும் !

Chitra said...

We pray for the speedy recovery and good health.

கவி அழகன் said...

உடம்பு தேறவேண்டும்
உங்களுக்கான
என் பிராத்தனைகள்

Jana said...

நலம்பெறவேண்டும். ம்ம்ம்... மகன்வழிப்பேரனையும் அந்த மடி நிச்சயம் ஏந்திக்கொள்ளும். உறுதியாக.
இலேசாக இருங்கள்..

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

அப்பா சுகமடைந்து வீடு திரும்ப வேண்டும். கவிதை யதார்த்தமாக இருக்கிறது ரமேஸ். நீங்களும் நலமோடிருங்கள்.

Unknown said...

ம்ம் டச்சிங்..

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு