(படம்:Manivarma Ko's Photos முகப்புத்தகத்திலிருந்து)
இரு கண்களில்
ஓர் அழுகை
உள்ளங்களிரண்டில்
ஒரு புன்னகை
உதடுகளிரண்டில்
ஒரு உச்சரிப்பு
இரண்டு என்றவைகளுக்கெல்லாம்
ஒன்று என்ற பொருள்
காதுமடல்களில்
செல்லப்பெயர்களின்
தேடல்
மறந்துவிட்டு
வாழும் வாழ்க்கை
வாழ்கையில் சிக்கிய
தேவை
சிக்கலில் சிக்கி
அவிழ்க்கும் முடிச்சுகள்
காதலிக்கப்படும் போது......
7 comments:
அருமை கவிஞரே!!
அண்ணே... சிவப்பு கலரில படம் போடுண்ணே...!
//காதுமடல்களில்
செல்லப்பெயர்களின்
தேடல்//
இது என் ஞாபகப் புதையல்களை கிளப்பி விட்ட வுரிகள்...அருமை..
அருமை.
கலக்கிறீங்க ரமேஷ்! இதெல்லாம் சும்மா வராதே? :-)
@@நன்றி மதுரைப்பாண்டி,
@@நன்றி நிரூசா அண்ண,
@@நன்றி சீலன் அண்ணா,
@@நன்றி சித்ரா அம்மணி,
@@ஜீ நன்றி.. அதான்னே
இதே காதல் கடைசிவரை தொடர்ந்தால் ஈருடல் ஓருயிர்தான் !
Post a Comment