தற்போது ஏற்பட்டுள்ள அடைமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக மட்டக்களப்பின் தென்மேற்கு பிரதேசத்தில் அமைந்துள்ள போரதீவுப்பற்று (வெல்லாவளி) பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்கள் முற்றாக தரைவழிப்பாதை தொடர்பறுந்த நிலையில் வள்ளங்களினூடான தொடர்புகளுடன் இருக்கிறார்கள்.
இப்பிரதேச செயலாளருடன் தொடர்பு கொண்டு பெற்ற தகவல்களின் அடிப்படையில் 04-02-2011 பிற்பகல் 6 மணிவரை இதுவரை 1128 குடும்பங்களைச் சேர்ந்த 4275 மக்கள் இடம்பெயர்ந்து 18 நலன்புரிமுகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதில் 1592 சிறுவர்களும் அடங்குவதாகவும் குறிப்பிட்டார். வேத்துச்சேனை, ஆனைகட்டியவெளி, சின்னவத்தை, மலைக்கட்டு, இராணமடு, முனைத்தீவு,பழுகாமம், பட்டாபுரம் போன்ற அனேக கிராமங்கள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளன.
இதனால் கிராமங்களுக்கிடையிலான போக்குவரத்து துண்டிக்கப்பட்ட நிலையில் இருப்பதால் மக்கள் மிகவும் கஸ்டப்படுவதாகவும் அவர்களுக்கு உலர்உணவுகள் மற்றும் படுக்கைவிரிப்புகள்(பாய்), உடுதுணிகள் போன்றன அவசரமாகத் தேவைப்படுகின்றன.
முடிந்தளவு உதவி நல்குபவர்கள் உதவிக்கொள்க. உறவுகளே அனர்த்தத்தின் தாக்கங்கள் அறிவீர்கள். முடிந்தளவு உதவுங்கள்.
இங்கு சென்று பட்டிருப்பு பாலத்தின் நிலமையைக்காட்டும் படங்கள் பார்க்க நன்றி ஹரி
கடந்த மாதம் எடுக்கப்பட்ட வீடியோ பதிவு.
பட்டிருப்பு பாலத்தின் போக்குவரத்து நிலைமை - 13.01.2011
இதனைவிட இப்பொழுது மிக அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
Friday, February 4, 2011
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
வேதனைக்கு மேல சோதனைகளும் சேர்ந்து கொண்டதே.... :-(
பட்ட காலிலேயே பட்டுகொண்டிருக்கிறது !
என்ன கொடுமை சரவணா?
nice
நன்றி சொல்கிறேன் அனைவருக்கும் வேறென்ன நான் சொல்ல
Post a Comment