Pages

Saturday, September 12, 2009

என் முதல் காதல்..

கற்பனை உலகை எட்டும் போது
கவிதை வரவில்லை
கண்கள் உனைக் கண்டபோது
வரிகள் வந்தது கவிதை
வடிவம் பெற்றது

உன் வார்த்தைச் சிதறல்கள்
என் இதயத்தில் பதிந்த
கவிச் சுவடுகள்..
உன் கண் சிமிட்டும் சந்தத்தில்
என் மனம் திண்டாடியது
காதல் பந்தத்தில் அன்றுதான்
நான் தடுமாறிய முதல் தினம்

தூரிகை உதடுகளால் வரைந்த
உன் புன்னகை ஓவியங்கள்
இப்போதும்
என் நெஞ்சினில்
நீ ஒரு
மொனாலிசாவாக....

உன்னோடிருந்த நிமிடங்களை
கடிகாரம்
திரும்பத் திரும்பக் காட்டுகையில்
மறக்க முடியவில்லை
உன்னையும் நீ விட்டுச் சென்ற
என் காதலையும் ....

நீ விளையாடிய
என் முதல் காதல்
உன் நினைவுகளைச்
சேர்த்துக்கொண்டு
மறு ஒளிபரப்பாகுது
இன்னும் என் மனசில்
மெகா சீரியலாக.....

3 comments:

jeyamee said...

\\உன்னோடிருந்த நிமிடங்களை
கடிகாரம்
திரும்பத் திரும்பக் காட்டுகையில்
மறக்க முடியவில்லை
உன்னையும் நீ விட்டுச் சென்ற
என் காதலையும் ....//

\\நீ விளையாடிய
என் முதல் காதல்
உன் நினைவுகளைச்
சேர்த்துக்கொண்டு
மறு ஒளிபரப்பாகுது
//
அழகான கற்பனை...
அழகான வரிகள்....

Ramesh said...

நன்றி ஜெயமீ ...
தொடர்திருங்கள் இன்னும் சிதறும்

maruthamooran said...

வாழ்த்துக்கள் ரமேஷ்…. கவிதைக்கும், வாழ்க்கைக்கும்.

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு