Pages

Monday, November 9, 2009

அர்த்தங்கள் நிறைந்த மௌனம்

இந்தக் கவிதை மீள் பதிவாகிறது எனது நண்பன் ஒருவனின் வேண்டுகோளுக்குஇணங்க.. பாருகங்கள் பிடித்திருக்கா என்று.

நண்பா இதோ உனக்காக அர்த்தங்கள் நிறைந்த மௌனம்



எத்தனை தடவைதான் என்
பார்வை அம்புகள்
உன் மேல்....
உன் மௌனத்தைக்
கலைப்பதற்கு

உன் மௌனம் என்னைக்
கொல்கிறதா
கொள்ளையடிக்கிறதா.........???
இன்னும் புரியாமல் நான்
உன் பின்னால்

என்னை என்றும் காதலிப்பதை
மௌனமாக சொல்கிறாயா
இல்லை
காதல் மௌனமானது என்கிறாயா ?????

நம் காதலின் சக்தி
பேசும் ஒலிச்சக்திகளால்
வீணாகி விடாமல்
காதலுக்கு சக்தி சேமிப்பா ??
சொல் மௌனமாய்
ஒரு வார்த்தை

வார்த்தைகளுக்காய் எத்தனையோ
கவிஞர்கள் காத்திருப்பு
ஆனால்
நீ
எத்தனையோ
கவிதைகளை பிரசவிக்கிறாய்
அழகிய மௌனத்தால்....


நிலவைப் பார்த்ததும்
நான் ரசிப்பது
ஒளிக்கீற்றுக்களை அல்ல
அதன் மௌனத்தை தானடி
அதுதான்...
உன் மௌனத்தின் ஆழத்தில்
இன்னும்
நான்
முத்தெடுக்கத் தவிப்பது

உன் மௌனத்துக்குள்
மூழ்கிவிட்டால் போதுமடி
காதலின் பாதி வாழ்க்கையை
வாழ்ந்துடுவேன்
மீதி வாழ்கையைப் பற்றியே
என் கவலை..


நீ
மௌனமாகவே இருந்துவிடு
இல்லையேல்
பிள்ளையார் பிடிக்கப்போய்
குரங்கான கதையாக
என் காதல் ஆகிவிடும்
என்ற பயம் எனக்கு.......

6 comments:

siva said...

supppppppppppppppppppppppper

Ramesh said...

நன்றி சிவா
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

padaippu said...

மௌனமான அர்த்தங்கள் .............

realy very suuuuuuuuuuuuuupper da.......

Ramesh said...

நன்றி நண்பரே
(படைப்பு உங்கள் பெயரை சொல்லமாடிங்களா)

Unknown said...

அருமையான கவிதை

Unknown said...

அருமையான கவிதை

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு