Pages

Tuesday, February 8, 2011

கருவாடும் வாழ்க்கையும்

மழைக்காலம் எண்டாலே ஒவ்வொருவருக்கும் கஸ்டங்கள் நிறைந்தாககத்தான் அமைகிறது. ஆனால் இம்மழையில்லையேல் உயிர்கள் வாழமுடியாது என்பதை நாம் மறந்துகொண்டுதான் இருக்கிறோம். மழைவேண்டிப் பிராத்தனைகள் நடைபெறுவதன் காரணம் என்ன என்பதை தெரியும்கால் விளங்கும் நமக்கு.

ஆனால் எதுவும் அளவுக்கு இருத்தல் வேண்டுமில்லையா. மழைக்காலம் போதும் இது வெள்ளக்காலமாய் இருக்கிறது. இதற்குக்காரணமாய் லா-நினோவின் தோற்றப்பாடாக கருதும் காலநிலைமாற்றம் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். ஆயினும் இக்காலநிலைமாற்றத்துக்கு நாம் தானே காரணம் என்றும் சொல்லிக்கொள்கிறோம். ஓசோன் படை வறிதாக்கம், பச்சைவீட்டு வாயு விளைவு, காடுகள் அழிப்பு, காபனீரொட்சைட்டுப் பெருக்கம் என்றெல்லாம் அடிக்கிக்கொண்டு போகிறோம். நமது வளர்ச்சியில் ஒரு தேய்வு இருக்கத்தானே வேண்டும்.

மழைக்காலம் என்று சொல்வது எங்களுக்கு வடகீழ்பருவப்பெயர்ச்சி மழை தரும் காலமே. வழமையில் இந்த மழைக்காலத்துக்காக நாம் எப்போதும் எங்களைத் தயார்ப்படுத்திக்கொள்வது இயல்பு. பாரம்பரியமாக வழமையான உணவுகளை விட இக்காலத்து உணவுகள் சற்று வேறுபட்டதாக இருக்கும். மரவள்ளிக்கிழங்குகளும் மாங்காய்ச் சம்பலும், உப்புக் கருவாடும் தண்ணிச்சோறும், கருவாட்டுக்குழம்பும் சுடுசோறும், கூனிச்சுண்டல், புட்டும்(பிட்டு) இடியப்பம் சம்பலும், தேங்காய்ப்பூரொட்டி.. என்று அடிக்கிக்கிட்டு போகலாம். இதற்குக் காரணம் உண்மையில் இக்காலத்தில் உணவுப்பொருள்களுக்குரிய தட்டுப்பாடும் விறகுகள் ஈரப்படுவதுமாகும். இதனால் குறைந்தளவு எரிபொருள்களில் சேமிக்கப்பட்ட உணவுகளை சமைத்து உண்ணப்படுதலேயாகும்.

இதற்காக அம்மா கருவாடு வாங்கிட்டுவா என்று சொன்னதுமே எனக்கு பிடித்த உப்புக்கருவாடுகளை வாங்கிக்கொண்டு கொடுக்கக்கூடியதாக இருந்தது முன்னைய வெள்ளத்துக்கு. ஆனால் தற்பொழுது நீண்டுகொண்டிருக்கும் இந்த வெள்ளமழைக் காலத்தில் மக்களுக்கு பெரும் அவஸ்தையை ஏற்படுத்தியிருக்கிறது. மீன்களுக்கு ஏற்பட்ட ஒருவகை நோய் போன்ற தன்மை(காயப்பட்ட மீன்கள்), மற்றும் மரக்கறிவகைகளுக்கும் தட்டுப்பாட்டு நிலைதோன்றியிருக்கிறது. மரக்கறிகள் உற்பத்தி செய்யும் நம்ம ஊருக்கே இந்த நிலைமை என்றால் நினைத்துப்பார்க்க முடியாத வேதனையைத் தருகிறது இந்த வெள்ள அனர்த்தம். மரக்கறிச்செய்கைகளை மூடிய வெள்ளம்.


மீன்பிடிக்கமுடியாத அளவுக்கு கடலும் கொந்தளிப்புடனும் வாவிமீன்பிடித்தொழிலும் மேற்கொள்முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வாவி மீன்களில் காயங்கள் காணப்படுவதால் சிலவேளை இவை நோயுற்றதன்மையைக் காட்டலாம் என்ற அச்சத்தில் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
இதனால் கருவாடுகளை நம்பிக் கடைக்குப்போனால் அதன் விலைகள் அதிகரித்தவண்ணமுள்ளன. இது ஒரு நடுத்தர அல்லது வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு மிக முடியாதவிடயம். பட்டினி என்பது ஆங்காங்கே எட்டிப்பார்க்கக்கும் என்பது திண்ணம். பொருளாதார மூலங்கள் அழிக்கப்படுவதனால் அல்லது வருமானம் தரும் தொழில்முறைகளை மேற்கொள்முடியாததால் மக்கள் நிலமைமோசமடையும். இதனால் வெள்ளஅனர்தத்துக்கு பின்னான விளைவுள் பாதகமாக அமையக்கூடியதாக இருக்கும்.

ஆனாலும் இந்த மழை விடுவதாய் இல்லை. இந்த மழைக்காலம் உடுதுணிகளை காயவைக்க முடியாததால் பெரும் அசெளகரியத்துக்குள்ளாகின்றோம்.
இதைத்தவிர குடிநீரில் சுத்தமான தன்மை குறைவு. நிலக்கீழ் நீரை நம்பி வாழும் நமக்கு கிணற்றுநீரை பருகுவது கேள்விக்குறியாக இருக்கிறது. சுட்டாறிய தண்ணியைக்குடிச்சித்தான் தேறவேண்டி இருக்கிறது. ஆனால் இது எல்லோராலும் இயலாத காரியம்.


இதனைவிட இந்த மழைக்காலங்களில் நீர் தேக்கிவைப்பதற்காகவே குளங்கள் கட்டப்பட்டன. இவற்றிலிருந்து நீர் வெளியேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. இல்லாவிடில் அணைக்கட்டுகள் உடையும் அபாயம் இதனை தவிர்ப்பதற்காக வான்கதவுகள் திறக்கப்பட்டுக்கொண்டு இருக்கின்றன. வெள்ள அபாயத்திலிருந்து நீங்கிகொள்ள வெள்ளத்தை வடியவைக்க முகத்துவாரம்( ஆற்று/களப்பு நீர் கடலை சென்றடையுமிடம்) புதிதாக எல்லாம் வெட்டப்பட்ட வாவி நீர் கடலோடு சங்கமித்துக்கொண்டிருக்கிறது. இதனால் ஒரு கிழமை மழைவெள்ளம் கூட ஓரிரு நாட்களில் வடியக்கூடியதாக இருக்கிறது. ஆனால் இதன் பிரதிவிளைவும் இருக்கிறது. இதன் அதீத நீரோட்டம் காரணமாக குடிநீர் தேக்கிவைத்திருக்கும் கிணற்று நீர் வற்றிக்கொண்டிருக்கிறது. இதன் காரணமாக சிறுவரட்சியிலேயே வழமையில் குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவும் படுவான்கரை மக்களுக்கு பின்னர் ஏற்படப்போகும் பாரிய வரட்சியைத் தாங்கொணா கஸ்டநிலமையைத் தோற்றுவிக்கும் என்பது தவிர்க்கமுடியாதாக இருக்கும்.

ஆக கருவாடு வாழ்க்கை வாழ்கிறோம் கருவாடாகிறோம்......

8 comments:

ம.தி.சுதா said...

கேட்க நல்லாத் தான் இருக்கு ஆனா இப்போதைக்க நாம மாமிசம் இல்லிங்கோ..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
என் சிங்கக்குட்டி சீறி வந்த நாளும் என் மீள் வருகையும்.

ஹேமா said...

ஒவ்வொரு முறையும் உங்கள் பதிவு பார்த்து கலங்குகிறேன் றமேஸ்.
பத்திரமா இருந்துகொள்ளுங்கோ !

Chitra said...

ஆக கருவாடு வாழ்க்கை வாழ்கிறோம் கருவாடாகிறோம்......


....உள்ள நிலைமையை இதை விட தெளிவாக சொல்ல முடியாது. கண்ணீர் வெள்ளமே வாழ்க்கையாக ..... :-(

Chitra said...

I couldn't vote in Tamilmanam - I think, Tamilmanam website has some problem.

Pranavam Ravikumar said...

Very Nicely presented.. But the background color distracts the effect of reading..

Warm wishes!

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
அழகு தமிழ்.
வாழ்த்துக்கள்.

Jana said...

கருவாடா..அந்த வார்த்தை கேட்டாலே 8 மைலுக்கு அப்பால் ஓடிவிடுவேன்.

ஈரோடு கதிர் said...

காலம் மாறும் றமேஸ்

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு