Pages

Wednesday, September 9, 2009

கலைந்து போன மேகம்

பகலும் இரவும் இணையும் புள்ளியில்
விழிகள் விளக்கேற்றிக்கொண்டன.....

நெகிழ்ந்து போனது நெஞ்சம்
தொலைந்து போனது இதயம்
உயிரும் கிள்ளி எடுக்கப்பட்டது
தள்ளி நின்ற உறவும் - கிட்ட வந்து
ஒட்டிக்கொண்டது
ஓ.............
காதல் வெற்றி பெற்றது அன்று.....

நேற்று
பட்டணத்துக்கு உன் பயணம்
பட்சணத்துக்கு ஏங்கும்
ஏழையாய் நான் ........

வேதனையில் இன்று
கலைந்து போனது என் காதல மேகம்

இன்னும் கரையினில் நான்
மோதும் அலைகளாய்
உன் நினைவுகள் !!!!!!!!

தேங்கிய உந்தன் நினைவுகள் சுமந்து
நிரம்பி வழியும் என் நெஞ்சம்
தாங்கிய கண்ணீரின்
வரிகள் கொண்ட கோலங்களாக
இன்னும் கொஞ்சம்.....
கண்ணீரின் வலி உணர்ந்து வரமறுத்த
கனவுகள் கூட சொல்லத்துடித்தன
காதல் கவிதைகள்

காணும் காட்சி எங்கும்
உந்தன் விம்பம்
கையில் எட்டா வண்ணம்
காட்சிப்பொருளாய்
நீயும்.......

எந்தன் உணவுகளைத் தூண்டி
உயிரின் கடைசித்துடிப்பையும்
நிறுத்திக்கொள்ளத் துடிக்குது
கனத்துக்கொண்ட காதல் இதயம்........

2 comments:

jeyamee said...

\\பகலும் இரவும் இணையும் புள்ளியில்
விழிகள் விளக்கேற்றிக்கொண்டன.....//

\\நேற்று
பட்டணத்துக்கு உன் பயணம்
பட்சணத்துக்கு ஏங்கும்
ஏழையாய் நான் ........//

மிக அழகான கற்பனைகள், வரிகள்...

Ramesh said...

நன்றி
உண்மைய சொல்லட்டுமா
நான் விழுந்த தடங்கள் இவை ....

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு