Pages

Monday, December 21, 2009

தவறிய காதலும் எழுதும் கவிதைகளும்

நாம்
காதலைப் பேசிக்கொள்ளாத
அந்தக்கணங்கள்
இப்போது
கவலைப்படுகின்றன
கலைந்துபோன
கருக்கொண்ட மேகங்கள்
உருக்குலைய
மறந்துவிட்டன என்று

அன்றைய
காதல் தவறி
இப்போது
காகிதத்தில்
விழுந்துவிட்டது



அப்போது
நமது கண்கள்
முட்டிக்கொண்ட போது
எனது கவிதைகளை
உன்னிடம் நான்
கொட்டியிருந்தால்
சிலவேளை
இப்போது
என்னோடு பந்தத்தில்
இணைந்திருப்பாய்

நீ விட்டுப்போனதால்
என் மனக்காகிதத்தில்
பல கவிதைகள்
பிரசவம்

நன்றி சொல்லுது
என் மனது
இப்போது
காதல் கொண்டு
தமிழ் வளர்க்கிறேன்
காதலை தமிழுக்கு
காணிக்கையாக்குகிறேன்



அன்று
நீ என்
காதல் கதாநாயகி
உன்னால் இன்று
எழுத்து, இயக்கம்,
தயாரிப்பு என்று
காதல் திரைப்படம்
என் கவிதைகளில்.....

12 comments:

Admin said...

கவிதை அழகு, அருமை. ஆனால் உங்கள் அனுபவத்தை கவிதையாய் வடித்திருப்பதுதான் கவலையாக இருக்கிறது.

Ramesh said...

நன்றி சந்ரு
அனுபவம் ஓர் ஆசிரியன்
மறுப்பீர்களா??
ஹிஹிஹி
ஆனால் இது என்னுடையதும் அல்ல...
அப்படி என்றால் கவிஞர்கள் பல பேரைக் காதலித்திருக்கவேண்டும்..

Chitra said...

நீ விட்டுப்போனதால்
என் மனக்காகிதத்தில்
பல கவிதைகள்
பிரசவம்........................Good one!

Ramesh said...

நன்றி சித்ரா தொடர் வருகைக்கும் பின்னூட்டலுக்கும்

கமலேஷ் said...

மிக நன்றாக இருக்கிறது...
நண்பரே..
வாழ்த்துக்கள்....

Ramesh said...

நன்றி கமலேஷ்
நானும் உங்கள் சுயம் தேடும் பறவைகளில் ஒன்று...

Paleo God said...

அன்றைய
காதல் தவறி
இப்போது
காகிதத்தில்
விழுந்துவிட்டது//

அதை கணினி
விழுங்கி விட்டது!!??... ::)) நல்லாருக்குங்க..:))

Ramesh said...

///அதை கணினி
விழுங்கி விட்டது!!??... ::)) ///
ச்ச இது தலைக்குள்ள ஏறலியே..ஹா ஹா..
நன்றி பலா பட்டறை...

பா.ராஜாராம் said...

நல்ல கவிதை ரமேஸ்!

Ramesh said...

வாங்க ராஜாராம்
நன்றி
முதல் வருகைக்கும்
பின்னூட்டலுக்கும்

அன்புடன் நான் said...

கவிதையை மிக ரசித்தேன்... நல்லாயிருக்குங்க.

Ramesh said...

வாங்க கருணாகரசு..
அன்புடன் உங்களை வரவேற்கிறேன்...
நன்றி வருகை மற்றும் பின்னூட்டலுக்கு

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு