Pages

Tuesday, September 15, 2009

காதல் வலி

நீயாக வீழ்ந்து கொள்ளவுமில்ல
நானாக மாட்டிக்கொள்ளவுமில்ல
தானாக நாமானோம்
இன்று
நீ நீயாக
நான் மட்டும்
யாரென்று தெரியல
ஏனென்றும் புரியல

இன்னும் உன்னிடம்
அடகுவைக்கப்பட்ட
என்மனது
வங்கியில்
மீட்கப்படாத என்வீட்டு
தங்கச்சங்கிலி போல

தொலைதூர தென்றலும்
என்மனசை
தொட்டுவிட்டுச் செல்லும்
உன் எஸ்எம் எஸ்
படிக்கையிலே

இந்த வேகார வெயிலிலும்
செருப்பிலாமல் நடக்கத்தோன்றுது
நீ விட்டுச் சென்றதாலே

ஆனாலும்
சுகம் காணும் காதலை விட
வலி பிடிச்சிருக்கு

3 comments:

Jaya.Sivanathan said...

வணக்கம் உங்களுடைய ஆக்கங்கள் எல்லாம் நன்றாக உள்ளது
உண்மையாக காதலித்து இருந்தால்
வலி கூட இன்பமாக இருந்திருக்கும் .....
சிலர் சநதற்பத்துக்கு அல்லவா காதலிக்கிறார்கள் ...
இதில் நீங்கள் எந்த ரகமோ

இப்படிக்கு
நட்புக்காக ஜெயா.சி
மரப்பாலம்

Unknown said...

காதலித்ததின் உணர்வா? இல்லை கறபனையின் உணர்வா?தமிழ்பிள்ளைமணி by

Unknown said...

மீண்டும் மீண்டும் படிக்க தோன்றுகிறது உங்கள் கவிதைகளை .....

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு